சந்திரபாபு சென்ற பஸ்ஸின் மீது விவசாயிகள் செருப்பு வீசித் தாக்குதல்!

Published:

chandrababu bus - 2026

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தின் மீது விவசாயிகள் செருப்புகளை வீசி வெளிப்படையான தாக்குதல் நடத்தினர்.

ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக அங்கே கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு அந்த இடமே சுடுகாடாக காட்சியளிப்பதாக தமக்கு தகவல் வந்ததாகவும், அதனால் அமராவதி பகுதியை பார்வையிடச் செல்வதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

இதன்படி காலை தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பேருந்தில் அவர் அமராவதிக்குச் சென்றார். அவர் சென்ற பஸ், வெங்கடபள்ளம் பகுதியில் சென்ற போது, விவசாயிகள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் சேர்ந்து பேருந்தை வழிமறித்தனர்.

அமராவதியில் தலைநகரை ஏற்படுத்துவதற்கு நிலம் கொடுத்த அந்த விவசாயிகள், அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு தங்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தனர்.

பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய அவர்கள், செருப்பை வீசி தாக்குதல் நடத்தினர். வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img