அமராவதி மண்ணை விழுந்து வணங்கிய சந்திரபாபு நாயுடு!

Published:

chandrababu amaravathi - 2026

தெலுகு தேசம் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை இன்று ஆந்திரா தலைநகர் அமராவதியில் பாதயாத்திரை சென்றார். ஒய்சிபி அரசு தகர்த்தெறிந்த ‘பிரஜா வேதிக’ இருந்த இடத்தை பார்வையிட்டார்.

உத்தண்டராயுனிபாலத்தில் தலைநகருக்கு அடிக்கல் நாட்டிய இடத்தைச் சென்றடைந்த சந்திரபாபு நாயுடு, அங்கு அமராவதி மண்ணை விழுந்து வணங்கினார்.

அப்போது பேசிய அவர், தலைநகர் அமராவதியை மயானத்தோடு ஒப்பிடுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஒய்சிபி அரசு அமராவதியை அலட்சியப்படுத்துகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை நாசம் செய்கிறது. ஹைதராபாத் போல் அமராவதியை முன்னேற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஒய்சிபி தலைவர்கள் குறுக்கிடுகிறார்கள் என்றார்.

chandrababu amaravathi1 - 2026

சந்திரபாபு நாயுடுவின் சலோ அமராவதி யாத்திரைக்கு ஒய்சிபி ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தார் கள். சந்திரபாபுவின் கான்வாய் மீது கற்களை வீசி எறிந்தார்கள்.

சந்திரபாபு நாயுடுவின் அமராவதி பயணத்தை தடுத்து நிறுத்த ஒவ்வொரு அடியிலும் முயற்சித்தார்கள். அவர் பயணித்த பஸ் மீது செருப்புகளை வீசினார்கள். சந்திரபாபு கோ பேக் என்று முழக்கமிட்டார்கள்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து அமராவதியில் வந்திறங்கினார் நாயுடு!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img