டாக்டர் பெண் படுகொலைக்குப் பின்…. ‘100’ விழிப்புணர்வு!

Published:

IMG 20191204 WA0000 - 2026

இளம்பெண் கால்நடை மருத்துவர் படுகொலைக்குப் பின் இப்போது 100 எண் டயல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவசர உதவிக்கு 100 எண் டயல் செய்தால் உடனடியாக உதவி கிடைக்கும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது

இதையடுத்து தனியார் வாகனங்களின் மேல் டயல் 100 டிரைவ்… எழுதப்பட்டு வருகிறது

திசா கொலை வழக்கின் எதிரொலியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹைதராபாத் மாவட்ட எல்லைக்குள் உள்ள பல ஆர்டிஏ அலுவலகங்களிலும் தனியார் வாகனங்களின் முன்னும் பின்னும் டயல் 100 என்று எழுத செய்துள்ளனர்.

அதிகம் பேருக்கு விவரம் தெரிவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹைதராபாத் மாவட்ட ஜேபிசி ஜே பாண்டுரங்க நாயக் தெரிவித்தார் .

மாவட்ட எல்லையில் உள்ள கைரதாபாத், சிகந்திராபாத், மலக்பேட், மெஹிதிபட்ணம், பண்ட்லகூடா ஆர்டிஏ அலுவலகங்களுக்கு வரும் வாகனங்களின் முன்னும் பின்னும் டயல் 100 நம்பரை தெளிவாக தென்படும்படி எழுதி வைக்கிறோம் என்று தெரிவித்தார்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img