தைரியம் வாய்ந்த வீரர்களுடன் கொண்டாடும் போது தீபாவளி இனிக்கிறது : பிரதமர் மோடி!

Published:

modi sweet diwali - 2026

இந்திய ராணுவ வீரர்கள் தான் என் குடும்பத்தினர். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்புகிறேன்; தைரியம் வாய்ந்த வீரர்களுடன் கொண்டாடும் போது தீபாவளி இனிக்கிறது என்று காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியபோது, பிரதமர் மோடி பேசினார்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பிரதமர் மோடி பேசியபோது…

தீபாவளியை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுவது பாரம்பரியம். நான் அதை ராணுவ வீரர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். எனவேதான் தீபாவளி கொண்டாட இங்கே வந்துள்ளேன். தைரியசாலிகளான நீங்கள் தான் என் குடும்பம்.

நாட்டில் பல எல்லைப்பகுதிகள் உள்ளன. ஆனால் நீங்கள் இருக்கும் இந்தப் பகுதி தனித்துவமானது. போர், ஊடுருவல் உட்பட அனைத்தையும் அனுபவிக்க வேண்டி இருக்கும். இந்தப் பகுதி தோல்வியைப் பார்த்திராத பகுதி. வெல்ல முடியாத பகுதி.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

தற்போது நேரம் மாறி விட்டது. நமது ஆயுதப் படைகள் நவீனமாக இருக்க வேண்டும். நமது ஆயுதங்களும் வெடிமருந்துகளும் நவீனமாக இருக்க வேண்டும். நமது வீரர்களின் முகங்களில் எந்த விதமான அழுத்தங்களும் இருக்க கூடாது என்றார்.

பின்னர் தனது டிவிட்டர் பதிவுகளில், ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களைப் பதிவிட்டார். அதில், ராணுவ வீரர்கள் தேசிய பேரிடர் நேரத்தில் ஆற்றும் பங்களிப்பையும், பொது சொத்துகளை அழிவில் இருந்து காத்ததையும் நினைவு கூர்ந்தார்.

ராணுவ வீரர்களின் நலனுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசியதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img