உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்!

Published:

K Vijay Kumar - 2026

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக தமிழகத்தின் கே.விஜயகுமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இது குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக இருந்து வந்த கே.விஜயகுமார், இனி மத்திய உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்னர் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயரெடுத்தவர் விஜயகுமார். இவர் தற்போது, உள்துறை அமைச்சகத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார் என்பது, தமிழக அரசியலில் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப் படுகிறது.

கே.விஜயகுமாருக்கு தற்போது 67 வயதாகிறது. கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில், 1952ல் பிறந்து, 1975இல் ஐபிஎஸ் பணியில் இணைந்தவர்.

Former advisor to the Governor of the erstwhile state of Jammu and Kashmir, K Vijay Kumar, has been appointed as a senior security advisor in the Union Home Ministry

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img