அன்று பால் வியாபாரி… இன்று அமைச்சர்! என்னை பாத்து கத்துக்குங்க: மல்லா ரெட்டி!

Published:

mallareddy telangana minister - 2026

சைக்கிளில் பால் வியாபாரம் செய்தேன். வெற்றிக்கு நானே உதாரணம் என்று கூறியுள்ளார் தெலங்காணா அமைச்சர் மல்லாரெட்டி. கஷ்டப்பட்டு உழைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு தானே நிதர்சனம் என்றார்.

தொழிலாளர், வேலை வாய்ப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நல முன்னேற்ற அமைச்சர் மல்லாரெட்டி தன் சிறு வயதில் சைக்கிளில் அலைந்து பால் வியாபாரம் செய்ததாகவும் தற்போது அமைச்சராக இருப்பதாகவும் தெரிவித்தார் .

பால் விற்பனையில் தொடங்கிய தன் வெற்றிப் பயணம் மல்லாரெட்டி கல்வி நிறுவனங்கள் வரை முன்னேறி உள்ளது என்றும் அதற்கு கடும் உழைப்பே காரணம் என்றும் கூறினார்.

கடந்த வாரம், டிஎஸ் ஐ பாஸ் ( Telangana State Industrial Project Approval and Self-Certification System (TS-iPASS) Act) ஏற்பாடு செய்த ஐந்து ஆண்டுகள் முழுமையடைந்ததைப் பாராட்டும் நிகழ்ச்சிகாக ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

ஐந்து ஆண்டுகளில் டிஎஸ்ஐபாஸ் வெற்றி பெற்றிருப்பது குறித்து வாழ்த்து தெரிவித்தார். இதற்காக முயற்சித்த அமைச்சர் கேடிஆருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கேடிஆரை புகழுரைகளால் நனைய வைத்தார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

வாழ்க்கையில் வெற்றிகள் பற்றி பேசுகையில் தான் வளர்ந்த வழிமுறை பற்றி குறிப்பிட்டார். தெலுங்கு மக்கள் புத்திசாலிகள். இளைஞர்கள் உழைத்து முயன்று லட்சியத்தை அடைய வேண்டும். அனைவரும் சேர்ந்து பணியாற்றி தெலங்காணாவை நாட்டிலேயே நம்பர் 1 இடத்தில் நிறுத்த வேண்டும்.

அமைச்சர் கேடிஆர் யங் அண்ட் டைனமிக் அமைச்சர். அவரை இளைஞர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மல்லாரெட்டி குறிப்பிட்டார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img