காங். அசாருதீன் வீட்டு விருந்தில் முதல்வர் சந்திரசேகர ராவ்!

Published:

azar kcr - 2026

காங்கிரஸ் தலைவர் அசாருதீன் வீட்டு விருந்துக்கு கே சந்திரசேகரராவ் சென்றார். பெரும் பரபரப்பான செய்தியாக இது பகிரப் பட்டது.

தெலங்காணா முதல்வர் கேசிஆர் மற்றுமொரு முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் வீட்டு விருந்தில் டிஆர்எஸ் கட்சித் தலைவர் பங்கேற்கப் போகிறாராம்.

பிரபல விளையாட்டு வீரரும் காங்கிரஸ் சீனியர் தலைவருமான அசாருதீன் தான் அந்த ‘கை’க் கட்சியின் தலைவர். அவருடைய மகன் அஸதுத்தீனுக்கும் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சகோதரி ஆனம் மிர்சாவுக்கும் திருமணம்.

இன்று (12ஆம் தேதி) அசதுத்தீன் – ஆனம் திருமண விருந்து நடக்க உள்ளது. இதற்கு அழைப்பதற்காக அசாருத்தீனும் சானியாமிர்சாவும் ஹைதராபாத் பிரகதி பவனில் முதல்வர் கேசிஆர் ஐ சந்தித்தார்கள். விருந்தில் பங்கு கொண்டு புதுமண தம்பதிகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கோரினார்கள்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிசினஸ்மேன் அக்பர் ரஷீது என்பவரை முதல் மணம் செய்து கொண்ட ஆனம்மிர்சா அவரை விவாகரத்து செய்து விட்டு அசாருத்தீனின் மகன் அசதுத்தீனை மணம் செய்து கொள்ள உள்ளார். கடந்த சில காலமாக அசதுத்தீனும் ஆனமும் காதலில் உள்ளதாக செய்திகள் வெளிவந்தன .

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

அந்த காதலை இரு வீட்டுப் பெரியோர் அங்கீகரித்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தேறியது. காங்கிரஸ் கட்சியில் உள்ள அசாருத்தீன் அண்மையில் டிஆர்எஸ் உதவியோடு ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக வெற்றி பெற்றார்.

மறுபுறம் சானியா மிர்சாவை தெலங்காணா மாநில பிராண்ட் அம்பாசிடராக முதல்வர் கேசிஆர் நியமித்தார். இந்த நிலையில் இவ்விரு முக்கிய பிரமுகர் இல்லங்கள் இடையே நிச்சயமான திருமண விருந்துக்கு கேசிஆர் செல்லவிருப்பதாக செய்தி.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img