மீம்ஸ்தானே..! போடுங்க… என்ஜாய்! அதிர வைத்த மோடி!

Published:

modi tweet - 2026

மீம்ஸ்தானே…!? போடுங்க! அதனை வரவேற்கிறேன். ரசித்து மகிழலாம் என்று கூறி தனது டிவிட்டர் பதிவில் கலகலக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

டிச.26 வியாழக்கிழமை இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதனை நாடு முழுவதும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இதனை பிரதமர் மோடியும் ரசித்துப் பார்த்து, தனது கருத்துகளை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மற்ற இந்தியர்களைப் போல், சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு நானும் ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். ஆயினும் மேகக் கூட்டங்கள் மறைத்திருப்பதால் தன்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். அதுகுறித்து ஸ்டைலிஷாக மூன்று படங்களையும் பதிவு செய்திருந்தார்.

பிரதமர் மோடியை கலாய்ப்பதற்கு என்றே டிவிட்டரில் சிலர் தங்கள் நையாண்டிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி குறித்த மீம்ஸ்களும் அதிகம். முன்னர் மகாபலிபுரத்தில் கடற்கரையில் குப்பையைக் குனிந்து எடுத்து சேகரித்துக் கொடுத்த படத்தை இணையதள வாசிகள் அதிகம் கேலி செய்தனர்.

இந்நிலையில், கறுப்பு வண்ண கூலிங் கண்ணாடி அணிந்து, கையிலும் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக சிறப்பு பாதுகாப்பு கண்ணாடி வைத்துக் கொண்டு மேலே வானத்தை நிமிர்ந்து பார்த்தபடி இருக்கும் மோடியின் படத்தினை ஷேர் செய்து, இது அனேகமாக மீம்ஸ் ஆகும் என்று கேலி செய்திருந்தார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

அந்தப் படத்தினை பகிர்ந்துள்ள மோடி, மோஸ்ட் வெல்கம்… என்ஜாய் 🙂 என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பலரும் ரிடிவீட் செய்து வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img