அதிர்ச்சி: சர்ச்சுகள் கட்ட அரசு நிதி தலா ரூ.5 லட்சம்!

Published:

ap churches1 - 2026

ஆந்திராவில் சர்ச்சுகள் கட்டுவதற்கு அரசு நிதி வழங்கியுள்ளது.

ஆந்திர பிரதேஷ் குண்டூர், பிரகாசம் மாவட்டங்களில் 4 சர்ச்சுகளைக் கட்டுவதற்கு அரசாங்கத்தில் இருந்து நிதி அளித்து மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

குண்டூர் மாவட்டத்தில் மூன்றும் பிரகாசம் மாவட்டத்தில் ஒன்றுமாக சர்சுகள் கட்டுவதற்கு ஒவ்வொன்றுக்கும் ரூ 5 லட்சம் அளிப்பதாக அரசாணை வெளிவந்துள்ளது.

குண்டூர் மாவட்டம் நிஜாம்பட்டணம் மண்டலம் ஆமுதாலபல்லி கிராமத்தில் கல்வாரி சர்ச், ஆமுதாலபல்லியில் உள்ள ஹரிஜன்வாடாவில் குளோரியன் சர்சு, காளிபட்டணம் கிராமத்தில் ப்ளௌன்சி சர்சு கட்டுவதற்கு அரசு 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

ap churches - 2026

சிறுபான்மையினர் நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக சர்ச்சுகளைக் கட்டுவதற்கு நிதி வழங்குவதாக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிதிகளை மண்டல் பரிஷத் டெவலப்மன்ட் ஆபீஸ் வழங்குகிறது.

பிரகாசம் மாவட்டத்தில் டங்குடூரு மண்டலம் கந்துலூரில் நிஸ்ஸீ ரிலீப் சொசைட்டி சர்ச் கட்டுவதற்கு மேலும் ரூ5 லட்சம் அளிப்பதாக மற்றுமொரு அரசாணை வெளியிட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img