தில்லி ஜே.என்.யு.,வில் வன்முறை வெறியாட்டம்… ரத்தவெறி ‘சிகப்பு’ கம்யூ., முகமூடிகளைக் கிழித்தது தில்லி போலீஸ்!

delhi police jnu issue1 - 2026
  • JNU இடதுசாரி தீவிரவாதிகளின் பெயர்கள் #LeftTerrorits
    ஆயிஷே கோஷ் (Aishe Ghosh)
    சுன்சுன் குமார் (Chunchun Kumar)
    சுசேதா துலுக்தார் (Sucheta Talukdar)
    ப்ரியா ரஞ்சன் (Priya Ranjan)
    இப்ப பாலிவுட் தீபிகா படுகோனே எங்கே போய் மூஞ்சியை வெச்சுப்பாங்க..?
  • JNU இடதுசாரி ஆதரவு மாணவர்களின் முகத்திரைகளை டெல்லி போலீஸ் கிழித்துத் தோரணம் கட்டியுள்ளது..!
    கொலை வெறி தாக்குதலில் முன்னின்று நடத்திய தலைவியை தான் கனிமொழி சென்று ஆறுதல் கூறினார்.

இப்படி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

என்ன காரணம்!?

delhi police jnu issue - 2026

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த கலவரத்தில், அப்பல்கலை மாணவர் சங்க தலைவி ஆயிஷே கோஷ் மற்றும் இடதுசாரி மாணவர் சங்கங்களுக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தில்லி போலீஸ் அதிகாரிகள் இன்று ஜே.என்.யு. விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர்.

தில்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ரந்த்வாணா இது குறித்துக் கூறியபோது…

ஜேஎன்யுவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தில்லி போலீஸ் குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜாய் திர்கி கூறுகையில், கலவரம் தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஜன., 1 முதல் 5 வரை ., மாணவர்கள் குறித்த விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய பல்கலை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு, பெரும்பாலான மாணவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மாணவர் சங்கங்கள், அவர்களின் ஆதரவாளர்கள் தவிர பெரும்பாலான மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கலவரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சந்தேக நபர்களை விரைவில் பிடித்து விசாரணை நடத்துவோம். கலவரத்தில் ஈடுபட்ட சிலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

கலவரம் தொடர்பாக பரவிய வீடியோ மற்றும் விசாரணை அடிப்படையில் அவர்களை கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, கலவரத்தில் உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்துவோம்.

மாணவர் சங்க தலைவர் ஆயிஷே கோஷ், வஷ்கர் விஜய் விகாஸ் படேல் சுசுன் குமார், பங்கஜ் மிஸ்ரா, வஷ்கர் விஜய், சுசிதா தலுக்ராஜ், பிரியா ரஞ்சன், டோலன் சவந்த், யோகேந்திரா பரத்வாஜ் மற்றும் இடதுசாரி மாணவர் சங்கத்தினருக்கு கலவரத்தில் பங்கு உள்ளது.

கலவரத்திற்கு முந்தைய நாள், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் சர்வர் அறை அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், சிசிடிவி காட்சிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. கலவரத்தில் தொடர்புடைய இன்னும் சிலரை விரைவில் அறிவிப்போம்… என்றார்.

இதனிடையே, தில்லி ஜேஎன்யு வன்முறையில் ஈடுபட்டவர்களை தில்லி போலீசார் வெளிக்கொண்டு வந்துள்ளனர். இவர்களால் உண்மை வெளிவந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தில்லி ஜே.என்.யு. வில் நடந்த கொடூர தாக்குதலால் பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகத்திற்கு உரிய 9 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், தில்லி போலீசாரின் முயற்சியால் உண்மை வெளிவந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் படங்களை பார்க்கும் போது, இடதுசாரி மாணவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டது தெளிவாகிறது. மாணவர்கள் அவர்களது போராட்டத்தை நிறுத்த வேண்டும். கல்வியை தொடங்கவும் , விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சிபிஐ, சிபிஐ(எம்), ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் லோக்சபா தேர்தலில் புறக்கணிக்கபட்டன. அதனால் இடது சாரிகள் அவர்களின் நலனுக்காக மாணவர்களை பயன்படுத்துகின்றனர் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories