தெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்!

Published:

telangana kcr jagan - 2026
  • கேசிஆர் மீது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் எரிச்சல்.
  • ஆந்திரப் பிரதேசை அழிப்பதற்கு திட்டம் தீட்டி உள்ளீர்களா?
  • ஜெகன்மோகன் ரெட்டியும் விஜயசாயிரெட்டியும் எந்த தூரம் வேண்டுமானாலும் கீழிறங்க தயங்கமாட்டார்கள்.
  • ஒய்சிபியின் நடைமுறை மீது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் ஆத்திரம்.

ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று தலைநகர்கள் இருப்பது நல்லதே என்று ஜெகனுக்கு கேசிஆர் பாராட்டு தெரிவித்தது குறித்து குண்டூர் மாவட்ட தெலுகு தேசம் கட்சி தலைவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

telangana kcr - 2026

அது அத்தகைய சிறப்பான முடிவு என்றால் தெலங்காணாவிலும் கூட மூன்று தலைநகர்கள் ஏன் வைக்கவில்லை என்று வினா எழுப்பினார்.

முதல்வர் ஜெகன் தனியாகக் கேசிஆரோடு ஆறு மணிநேரம் பேச்சு நடத்தினார். அந்த உரையாடலால் ஆந்திராவுக்கு கிடைத்த பலன்கள் என்னவோ வெளியே தெரிவிக்க வேண்டும் என்று டிடிபி பொலிட்பீரோ மெம்பர் ‘வர்ல’ ராமய்யா டிமாண்ட் செய்தார். அமராவதி வளர்ச்சி அடைந்தால் அருகிலேயே உள்ள ஹைதராபாத்துக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்ற தீய எண்ணம் கேசிஆர் பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது என்று எம்பி ‘கல்லா’ ஜயதேவ் குற்றம்சாட்டினார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

ஜகன் முதல்வர் ஆன நாள் முதல் ஆந்திர பிரதேசுக்கு ஷேடோ பாஸாக கேசிஆர் நடந்து கொள்கிறார் என்று விமர்சித்தார்.

அடக்கி ஆள்வதற்கு இது ஒன்றும் ஆர்டிசி போராட்டம் அல்ல என்றும் தெலுங்கு மக்களின் தன்மானப் பிரச்சினை என்றும் முன்னாள் அமைச்சர் ‘நக்கா’ ஆனந்தபாபு கூறினார்.

telangana kcr2 - 2026

2019 தேர்தலில் ஒய்சிபிக்கு பண உதவி செய்ததற்கு நன்றியாக விஜயசாயிரெட்டி கேசிஆருக்கு பாத நமஸ்காரம் செய்தார் என்றார்.

கேசிஆரின் காலில் விழுவதும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதும் அங்கப்பிரதட்சணம் செய்வதும் ஏ ஒன், ஏ டூக்களுக்கு புதியது ஒன்றுமில்லை என்று டிடிபி மாநிலத் தலைவர் ‘கிமிடி களா’ வெங்கட்ராவு ஏளனம் செய்தார்.

வழக்குகளிலிருந்து வெளி வருவதற்காக விஜயசாயிரெட்டி, நில ஆக்கிரமிப்பு செட்டில்மெண்ட் வசூல் போன்றவற்றுக்காக அமைச்சர் அவந்தி ஸ்ரீனிவாஸ் போன்றோர் கேசிஆரின் காலில் விழும் பேரம் பேசுவதற்கு போட்டியில் உள்ளார்கள் என்று டிடிபி எம்எல்ஏ மந்தென சத்யநாராயண ராஜூ விமர்சனம் செய்தார்.

ஒலிம்பிக்கில் பாதபூஜை போட்டி நடத்தினால் இவர்கள் இருவருக்கும் முதல் பரிசு கிடைக்கும் என்று ஏளனம் செய்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img