திருப்பதியை ஆந்திர தலைநகராக்க… தெலுங்கு தேசம் கோரிக்கை!

Published:

andhra cbnaidu - 2026

அமராவதி இல்லாவிட்டால் திருப்பதியை தலைநகராக்குங்கள் என்று தெலுங்கு தேசம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தெதேக எம்எல்ஏ தொரபாபு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை மாற்ற நினைத்தால் திருப்பதி நகரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ தொரபாபு வேண்டுகோள் விடுத்தார்.

தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

பரிபாலன தலைநகரை விசாகப்பட்டினத்திற்கு மாற்றும் வாய்ப்பை எதிர்கொள்ள நேர்ந்தால் திருப்பதிக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். திருப்பதி- ஸ்ரீகாளகஸ்தி இடையே ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமி உள்ளது என்றார்.

திருப்பதி நகரத்தில் கட்டடங்கள் கைவசம் உள்ளன என்றும் உலக நாடுகளை ஈர்க்கும் ஆன்மீக நகரம் திருப்பதியை தலைநகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மண்டலியில் எடுத்துக் கூறியுள்ளதாகவும் சொன்னார். திருப்பதி கல்வி நிலையங்களின் வளர்ச்சியோடு கூட சுற்றுலா கேந்திரமாகவும் வளர்ந்துள்ள நிலையில் பரிபாலன தலைநகருக்கான அருகதை அதற்கு ஏற்படுத்த வேண்டுமென்று விண்ணப்பித்தார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

அமராவதியில் தலைநகர் ஏற்பாட்டிற்கு செலவு அதிகமாகும் என்று கூறும் அரசாங்கம், மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து கட்டடங்களுக்கு 1400 கோடி ரூபாய் செலவு செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

29 கிராமங்களில் பள்ளிக்கூடங்களை போலீசார் ஆக்கிரமித்தார்கள் என்றும் அதனை புகைப்படம் எடுப்பதற்கு சென்ற மீடியா நிருபர்களின்மீது நிர்பயா சட்டத்தை உபயோகித்து வழக்கு விதித்தார்கள் என்றும் போலீஸ் துறையை குற்றம்சாட்டினார்.

தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட தலைவர் நானி, மற்றும் நரேந்திர குமார், சண்முகம், ஒய் வி இராஜேஸ்வரி, பிரவீன் ஆகிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img