காதலில் ஆரம்பித்து கட்டிலில்.. பின் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு! 182 பெண்கள் மாட்டிய விபரீதம்!

Published:

child 2 - 2026

அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக 182 பெண்களை மிரட்டி பணம் பறித்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த வழக்கை கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகா மற்றும் பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தை நடத்தி வரும் ஆதித்ய அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்தே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

முதலில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகுகின்றனர். பின்னர் அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு நெருக்கமாக பழகுகின்றனர்.

abasa vedio - 2026

அப்போது அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொள்கின்றனர். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம், வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இதேபோல் 182 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த வருடம் நவம்பர் மாதம் கொல்கத்தா காவல்துறையிடம் புகார் அளித்தார்.

lady - 2026

புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொணடனர். இந்த நிலையில் இந்த சம்பவங்களுக்கு உடைந்தையாக இருந்த கைலாஷ் யாதவ் என்பவரை காவல்துறையினர் கடந்த 10ஆம் தேதி கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து அனீஷ் லோஹரூகா மற்றும் ஆதித்ய அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த லேப்டாப் ஒன்றையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img