திசா ஆப்க்கு முதல் வெற்றி! புகார் பெற்ற 6வது நிமிடம்.. கைதானவர் ஒரு பேராசிரியர்!

disha 1 vert - 2026

விஜயவாடா பஸ்ஸில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை. திசா ஆப் மூலம் கிடைத்த வெற்றி.

செவ்வாய்க் கிழமை அதிகாலை பஸ்ஸில் தன் பின் சீட்டில் அமர்ந்து ஆபாசமாக சீண்டிக் கொண்டிருந்த நபரால் அவமானத்துக்கு உள்ளான பெண் பயணி திசா ஆப் பட்டனை அழுத்தி உடனே போலீஸிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் நேற்று ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் 43 வயதான எ. பசவய்யா திசா சட்டத்தின் கீழ் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில் கைது செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன்பு செவ்வாயன்று நிறுத்தப்பட்டார். இது திசா ஆப் பின் முதல் வெற்றி.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.21 மணிக்கு மங்களகிரி திசா கால் சென்டருக்கு எஸ்ஓஎஸ் கால் ஒன்று சென்றது. 4.27க்கெல்லாம் பாதிக்கப்பட்டவரிடம் போலீசார் சென்றடைந்தனர்.

disha - 2026

மேற்கு கோதாவரி மாவட்டம் சூப்பரின்டென்டென்ட் ஆஃப் போலீஸ் ராகுல் சிங் க்ரேவல் இது குறித்துக் கூறிய போது…

ஒரு பெண்மணி விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு பஸ்ஸில் பயணித்தார். சக பயணி அவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விடியற்காலை 4.20 மணிக்கு சமயோஜிதமாக திசா ஆப் எஸ்ஓஎஸ் பட்டனை அழுத்தி மொபைல் போனை ஐந்து முறை அசைத்தார். அதே நேரம் 100 நம்பருக்கும் டயல் செய்தார். உடனடியாக விஷயம் எஸ்பி கவனத்துக்கு சென்றதும் அவர் ஏலூரு டிஎஸ்பி ஓ. திலீப் கிரணை அலெர்ட் செய்தார்.

அடுத்த ஆறாவது நிபிடம் அதிகாரிகள் புகார் வந்த ஏபிஎஸ்ஆர்டிசி கருடா பஸ்ஸை ஜிபிஆர்எஸ் மூலம் கண்டறிந்து பஸ்சை கலபாரு டோல் பிளாசாவில் நிறுத்தினார்.

விஜயவாடாவில் அரசுப் பணியில் இருக்கும் 40 வயதான அந்தப் பெண்மணி சக பயணியால் தனக்கு நேர்ந்த துயரத்தை போலிசாரிடம் விவரித்தார். திசா ஸ்பெஷல் ஆபீசர் தீபிகா பாடீலுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது.

ஏலூரு த்ரீ டவுன் காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர் பெத்தபாடு காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் மீது 354a, 354 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன் செவ்வாய் மாலை நிறுத்தப்பட்டார்.

ஆந்திர மாநில அரசு செவ்வாயன்று திசா ஸ்கீமுக்கு மேலும் 48 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்புக்காக ஆந்திர அரசு திசா சட்டம் மற்றும் திசா போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை அமைத்துள்ளது. இந்நிலையில், சிறப்பாகவும் விரைவாகவும் செயலாற்றிய போலீசாரை முதல்வர் ஜெகன் பாராட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories