அதுக்காக இப்படியா அடிப்பாங்க! இப்போ கம்பி எண்ணுறாங்க!

Published:

round table school1 - 2026

ஹைதராபாத் சனத்நகரில் பள்ளி மாணவச் சிறுவன் ஒருவனை சாலையில் வைத்து ஒரு தம்பதிகள் வீராவேசம் கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.

பள்ளி மாணவர்கள் சாலையில் கூச்சலிட்டு பேசிக் கொண்டு செல்கிறார்கள். தங்களுக்கு தொந்தரவாக உள்ளது என்று சாலையில் பலரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த சிறுவனை போட்டு அடித்தார்கள். அடி தாங்க மாட்டாமல் அவர்களின் காலை பிடித்துக்கொண்டு மாணவன் கெஞ்சினாலும் அவர்கள் பரிதாபம் காட்டவில்லை.

அதோடுகூட அந்த பள்ளி மாணவன் மேல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூட அளித்தார்கள். விஷயம் தெரிந்து கொண்ட பையனின் பெற்றோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்கவே போலீசார் களத்தில் குதித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது அரசாங்க பள்ளி சீருடையில் இருந்த அந்த மாணவனை அந்த தம்பதிகள் அடித்ததை தெரிந்துகொண்டு போலீசார் அந்த தம்பதிகளை கைது செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது. அரசாங்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பையனை சாலையின் மீது பேசிக்கொண்டே சென்றதற்காக சாலையோரத்தில் இருந்த வீட்டிலிருந்து ஒரு பெண்மணி வந்து அடித்து துவைத்தார். சற்றைக்கெல்லாம் வீட்டிற்குள்ளிருந்து கணவனும் வந்து அந்த பையனை முதுகிலும் தலையிலும் போட்டு அடித்தார்கள்.

அந்த பையன் காலை பிடித்துக்கொண்டு கெஞ்சினாலும் கேட்கவில்லை. அதோடுகூட அரசு பள்ளியில் படிக்கும் லேபர் பயலுகளா, என்றெல்லாம் கூட அவர் வாயில் வந்தபடி திட்டியதாக தெரிகிறது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img