சந்திரபாபு அப்போது கழுதை மேய்த்தாரா? பேரவையில் கேள்விகேட்ட ஜெகனால் சலசலப்பு!

Jagan Chandrababu - 2026

ஐந்து ஆண்டுகள் ஆந்திர முதலமைச்சராக பதவி வகித்த சந்திரபாபு நாயுடு தெலங்கானாவில் கட்டிய காளேஸ்வரம் திட்டத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்று முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

நீர்ப்பாசனத் திட்டத்தின் மீது சட்டப்பேரவையில் நிகழ்ந்த விவாதத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட தீவிர விவாதமானது, பின்னர் வார்த்தைப் போராக வெடித்தது.

எதிர்க்கட்சியில் இருந்த போது காளேஸ்வரம் திட்டத்தை எதிர்த்து மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்த ஜகன் முதலமைச்சர் ஆனதும் அந்த திட்டத்தின் திறப்பு விழாவிற்கு சென்றது ஏன்? என்று தெலுகு தேசம் கட்சி கிண்டலடித்து.

அதற்கு பதிலளித்த ஜகன், ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, காளேஸ்வரம் திட்டத்தை ஏன் தடுக்க முன்வரவில்லை? ஐந்து ஆண்டுகளும் நாயுடு என்ன கழுதை மேய்த்தாரா? என்று கேட்டார்.

சந்திரபாபு அரசாண்ட காலத்தில் ஆல்மட்டி அணையின் உயரத்தை உயர்த்திய போது ஏன் வாய் திறக்கவில்லை என்று கேட்டார் ஜெகன்.

“பத்தாண்டுகளாக ஆந்திராவுக்கு கிருஷ்ணா நீர்வரத்து குறைந்து விட்டது. இது சந்திரபாபு நிர்வாகத்தின் விளைவுதான்! நாங்கள் அண்டை மாநிலத்துடன் நட்போடு கொடுத்து வாங்கும் விதத்தில் நடந்து கொள்கிறோம். சண்டை சச்சரவை வளர்த்தால் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது” என்று ஜெகன் விவரித்தார்.

தான் அரசாட்சிக்கு வந்தமர்ந்த போது, அந்த திட்டம் நிறைவடைந்து  விட்டது என்றும் அந்த திட்டத்தை தொடக்கத்திலேயே தடுக்காத தெலுங்கு தேசம் இப்போது தன் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்வதாகவும் ஜெகன் கொஞ்சம் கடுப்பாகி, எரிந்து விழுந்தார்.

மைத்துனன் ஹரிகிருஷ்ணா இறந்தபோது சவத்தை அருகில் வைத்துக் கொண்டு கேசிஆரோடு கூட்டணி பற்றிப் பேசிய நாயுடு, தன்னை விமர்சிப்பது விந்தையாக உள்ளது. இரண்டு தெலுங்கு மாநிலங்களும் நட்போடு விளங்குவதைப் பார்த்து வாழ்த்துவதை விட்டுவிட்டு விமர்சிப்பது தகுந்த செயல் அல்ல என்றார் ஜெகன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories