பிரதமர் போட்டியில் நான் இல்லை: அதற்கான திறமையும் எனக்கில்லை: நிதிஷ் குமார் பளிச் பதில்

Published:

modi nithish - 2026

பாட்னா:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் இன்று பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ”பீகார் மக்களுக்காகப் பணியாற்றவே நான் நியமிக்கப்பட்டுள்ளேன். தேவையில்லாமல் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதாக பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. பிரதமர் ஆகும் திறமை எனக்கு இல்லை. மோடிக்கு அந்தத் திறன் இருந்ததால்தான் அவர் 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனார். 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் மக்கள்தான் முடிவு எடுப்பார்கள்’ என்றார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “நான் தொடர்ந்து தேவையில்லாமல் இலக்காக்கப்படுகின்றேன். எங்களுடையது ஒரு சிறிய கட்சி. நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. எங்களுடைய கட்சியின் தேசியத் தலைவர் ஆனால், நான் பிரதமர் பதவிக்கான போட்டியாளர் என்பது பொருள் இல்லை” என்றார்.

மேலும், “மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்ற நிதிஷ் குமார், என்னுடைய வாழ்க்கையில் எம்.பி.யாக, மத்திய மந்திரியாக, இப்போது முதல்-மந்திரியாக மக்களுக்காக பணியாற்றுகிறேன். இப்போது பீகாரில் மகா கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு அளித்து உள்ளனர், என்னுடைய பணியை நேர்மறையான முறையில் செய்து வருகின்றேன்” எனவும் கூறினார் நிதிஷ் குமார்.

பாரதீய ஜனதாவிற்கு எதிரான கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்குத்தான் பிரதமர் ஆகும் திறமை என்னிடம் கிடையாது என கூறினார் நிதிஷ்குமார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img