கல்யாண இன்விடேஷன்ல கடத்தல்! ரூ.5 கோடி மதிப்பில் போதைப் பொருள் மாட்டியது!

robbery 3 - 2026

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா விமானநிலைய வான்வழி போக்குவரத்து சரக்கு பெட்டகத்துக்கு (Air Cargo) மதுரையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் முகவரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக ஒரு கொரியர் பார்சல் வந்துள்ளது.

அதை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில், ஏதோ துகள்கள் இருப்பது தெரியவந்தது. அது சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்தப் பார்சலைத் திறந்து பார்த்திருக்கிறார். அதனுள்ளே திருமண அழைப்பிதழ் அட்டைகள் இருந்துள்ளன.

marriage invitation - 2026

சந்தேகம் வலுத்ததால், இரண்டுபக்கமும் ஒட்டப்பட்ட திருமண அழைப்பிதழ் அட்டைகளைக் கிழித்துப் பார்த்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதில், சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வெள்ளை நிறத்தில் பவுடர் நிரப்பப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள், அதை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பரிசோதனையில், அந்த பவுடர் மருத்துவத்துறையில் மருத்துவர்கள் கவனத்துடன் கையாளும் எபெட்ரின் (Ephedrine) என்பது தெரியவந்தது. மருத்துவத் துறையில் ஆஸ்துமா சிகிச்சையிலும் மயக்க மருந்தாகவும் எபெட்ரின் பயன்படுத்தப்படுகிறது.

robbery 1 1 - 2026

அந்த மருந்தை, போதை பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக திருமண அழைப்பிதழ் அட்டைகளுக்குள் மறைத்து அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நூதன கடத்தல் குறித்து கெம்பேகவுடா விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில்,“திருமண அழைப்பிதழ் அட்டையில் தனி லேயர் உருவாக்கி, அதனுள் சிறிய பிளாஸ்டிக் கவரில் எபெட்ரினை மறைத்து வைத்து ஒட்டியுள்ளனர்.

43 அழைப்பிதழ் அட்டைகளில் 86 பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 5 கிலோ எடையுள்ள, இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும். மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முகவரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அது அனுப்பப்பட இருந்தது.

அழைப்பிதழை வடிவமைத்த அச்சகத்தையும் விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories