கல்யாண இன்விடேஷன்ல கடத்தல்! ரூ.5 கோடி மதிப்பில் போதைப் பொருள் மாட்டியது!

robbery 3 - 2026

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா விமானநிலைய வான்வழி போக்குவரத்து சரக்கு பெட்டகத்துக்கு (Air Cargo) மதுரையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் முகவரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக ஒரு கொரியர் பார்சல் வந்துள்ளது.

அதை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில், ஏதோ துகள்கள் இருப்பது தெரியவந்தது. அது சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்தப் பார்சலைத் திறந்து பார்த்திருக்கிறார். அதனுள்ளே திருமண அழைப்பிதழ் அட்டைகள் இருந்துள்ளன.

marriage invitation - 2026

சந்தேகம் வலுத்ததால், இரண்டுபக்கமும் ஒட்டப்பட்ட திருமண அழைப்பிதழ் அட்டைகளைக் கிழித்துப் பார்த்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதில், சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வெள்ளை நிறத்தில் பவுடர் நிரப்பப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள், அதை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பரிசோதனையில், அந்த பவுடர் மருத்துவத்துறையில் மருத்துவர்கள் கவனத்துடன் கையாளும் எபெட்ரின் (Ephedrine) என்பது தெரியவந்தது. மருத்துவத் துறையில் ஆஸ்துமா சிகிச்சையிலும் மயக்க மருந்தாகவும் எபெட்ரின் பயன்படுத்தப்படுகிறது.

robbery 1 1 - 2026

அந்த மருந்தை, போதை பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக திருமண அழைப்பிதழ் அட்டைகளுக்குள் மறைத்து அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்த நூதன கடத்தல் குறித்து கெம்பேகவுடா விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில்,“திருமண அழைப்பிதழ் அட்டையில் தனி லேயர் உருவாக்கி, அதனுள் சிறிய பிளாஸ்டிக் கவரில் எபெட்ரினை மறைத்து வைத்து ஒட்டியுள்ளனர்.

43 அழைப்பிதழ் அட்டைகளில் 86 பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 5 கிலோ எடையுள்ள, இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும். மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முகவரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அது அனுப்பப்பட இருந்தது.

அழைப்பிதழை வடிவமைத்த அச்சகத்தையும் விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories