கல்யாண இன்விடேஷன்ல கடத்தல்! ரூ.5 கோடி மதிப்பில் போதைப் பொருள் மாட்டியது!

robbery 3 - 2026

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா விமானநிலைய வான்வழி போக்குவரத்து சரக்கு பெட்டகத்துக்கு (Air Cargo) மதுரையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் முகவரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக ஒரு கொரியர் பார்சல் வந்துள்ளது.

அதை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில், ஏதோ துகள்கள் இருப்பது தெரியவந்தது. அது சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்தப் பார்சலைத் திறந்து பார்த்திருக்கிறார். அதனுள்ளே திருமண அழைப்பிதழ் அட்டைகள் இருந்துள்ளன.

marriage invitation - 2026

சந்தேகம் வலுத்ததால், இரண்டுபக்கமும் ஒட்டப்பட்ட திருமண அழைப்பிதழ் அட்டைகளைக் கிழித்துப் பார்த்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதில், சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வெள்ளை நிறத்தில் பவுடர் நிரப்பப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள், அதை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பரிசோதனையில், அந்த பவுடர் மருத்துவத்துறையில் மருத்துவர்கள் கவனத்துடன் கையாளும் எபெட்ரின் (Ephedrine) என்பது தெரியவந்தது. மருத்துவத் துறையில் ஆஸ்துமா சிகிச்சையிலும் மயக்க மருந்தாகவும் எபெட்ரின் பயன்படுத்தப்படுகிறது.

robbery 1 1 - 2026

அந்த மருந்தை, போதை பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக திருமண அழைப்பிதழ் அட்டைகளுக்குள் மறைத்து அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நூதன கடத்தல் குறித்து கெம்பேகவுடா விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில்,“திருமண அழைப்பிதழ் அட்டையில் தனி லேயர் உருவாக்கி, அதனுள் சிறிய பிளாஸ்டிக் கவரில் எபெட்ரினை மறைத்து வைத்து ஒட்டியுள்ளனர்.

43 அழைப்பிதழ் அட்டைகளில் 86 பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 5 கிலோ எடையுள்ள, இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும். மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முகவரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அது அனுப்பப்பட இருந்தது.

அழைப்பிதழை வடிவமைத்த அச்சகத்தையும் விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories