பட்டுப்புடவை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்! தெலங்காணா ஆளுநர் தமிழிசை!

Published:

IMG 20200305 WA0012 - 2026

பட்டுப்புடவை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்… தெலங்காணா கவர்னர் தமிழிசை.

பெண்கள் தம் வாழ்க்கையில் புடவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் களிங்கா பவனில் சில்க் மார்க் ஆர்கனைசேஷன் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் சில்க் போர்டு, ஜவுளித்துறை இணைந்து நடத்திய சில்க் மார்க் இந்தியா கண்காட்சியை கவர்னர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது பல மாநிலங்களில் இருந்தும் வந்த கைத்தறி தொழிலாளர்கள் தயார் செய்த சில்க் புடவைகளின் சிறப்புகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

திருமணம், பண்டிகைகளின் போது பெண்கள் பட்டுப்புடவைகளை அதிகமாக அணிவதாக கவர்னர் கூறினார்.

கைத்தறி தொழிலாளர்கள் மிகவும் உழைத்து தயாரிக்கும் சில்க் மார்க் புடவைகளை அணிந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

“பட்டுப் புடவைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரதத்தின் சம்பிரதாயங்களை அதிகமாக நான் விரும்புவேன்” என்று கூறினார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

புடவைகளை வாங்குபவர்கள் பட்டுப் புடவைகளின் விலையை பார்க்கக் கூடாது என்றும் அவைகளின் தயாரிப்பின் பின்னணியில் உள்ள உழைப்பை பார்த்து அவற்றை வாங்க வேண்டும் என்றும் கவர்னர் குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சி இந்த மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img