தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் தற்கொலை முயற்சி!

Published:

IMG 20200305 WA0017 - 2026

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஒருவர் தற்கொலை முயற்சி.

முன்னாள் மேயரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருள் ஒருவருமான பங்கி ஆனந்தையா தற்கொலை முயற்சி செய்தார். மார்ச் 4 அன்று அவர் தன் வீட்டில் தூக்கில் தொங்கி இறப்பதற்கு முயற்சித்தார்.

மனைவியும் மகளும் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட் சென்றிருந்த வேளையில் வீட்டில் தூக்கில் தொங்கி உயிர்விடத் துணிந்தார். அரசியல் ரீதியாக அனைவரும் ஏமாற்றுபவர்களே என்ற மனவேதனையில் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிகிறது.

அண்டை அயலார் கவனித்து அவரை உடனே கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு உயிருக்கு அபாயம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

தெலுங்கு தேசம் கட்சியில் பங்கி ஆனந்தையா முக்கியமான தலைவர். வினோதமான வேஷங்கள் அணிந்துகொண்டு அரசாங்கத்தின் திட்டங்களை கிண்டல் செய்வது ஆனந்தையாவின் வழக்கம்.

அப்படிப்பட்டவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்று அறிந்து தெலுங்குதேசம் கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img