December 8, 2025, 9:51 PM
24.7 C
Chennai

தெலங்காணா சட்டசபையில் ஒலித்த திருக்குறள்! ஆளுநர் தமிழிசையின் குறளிசை!

tamilisai in telangana 1 - 2025

தெலங்காணா சட்டசபையில் தனது முதல் கூட்டத் தொடரில் பங்கேற்றார் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர் திருக்குறளை முத்தாய்ப்பாகச் சொல்லி உரையை நிறைவு செய்தார்.

ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது முதல் சட்டமன்றத் தொடரில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், ‘உறு பசியும் ஓவாப் பிணியும்..’ எனத் தொடங்கும் திருக்குறளைச் சொல்லி, உரையை நிறைவு செய்தார்.

தெலங்காணா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னர், அந்த மாநில சட்டமன்றத்தின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்திருந்தார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவரை முதல்வர் சந்திரசேகரராவ், சபாநாயகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் சட்டமன்றத்தில் தமது முதல் உரையைத் தொடங்கிய ஆளுநர் தமிழிசை, அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் தொடங்கிய அவர், ஆங்கிலத்தில் தொடர்ந்து உரையாற்றினார்! இறுதியில் தமது உரையை முடிக்கும் முன்னர், ஒரு திருக்குறளைச் சொன்னார்.

”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு” என்ற திருக்குறளைக் கூறினார். தொடர்ந்து, ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார். மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு என்பது இதன்பொருளென்பதை ஆங்கிலத்தில் கூறி உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Entertainment News

Popular Categories