தெலங்காணா சட்டசபையில் ஒலித்த திருக்குறள்! ஆளுநர் தமிழிசையின் குறளிசை!

Published:

tamilisai in telangana 1 - 2026

தெலங்காணா சட்டசபையில் தனது முதல் கூட்டத் தொடரில் பங்கேற்றார் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர் திருக்குறளை முத்தாய்ப்பாகச் சொல்லி உரையை நிறைவு செய்தார்.

ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது முதல் சட்டமன்றத் தொடரில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், ‘உறு பசியும் ஓவாப் பிணியும்..’ எனத் தொடங்கும் திருக்குறளைச் சொல்லி, உரையை நிறைவு செய்தார்.

தெலங்காணா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னர், அந்த மாநில சட்டமன்றத்தின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்திருந்தார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவரை முதல்வர் சந்திரசேகரராவ், சபாநாயகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் சட்டமன்றத்தில் தமது முதல் உரையைத் தொடங்கிய ஆளுநர் தமிழிசை, அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் தொடங்கிய அவர், ஆங்கிலத்தில் தொடர்ந்து உரையாற்றினார்! இறுதியில் தமது உரையை முடிக்கும் முன்னர், ஒரு திருக்குறளைச் சொன்னார்.

”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு” என்ற திருக்குறளைக் கூறினார். தொடர்ந்து, ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார். மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு என்பது இதன்பொருளென்பதை ஆங்கிலத்தில் கூறி உரையை நிறைவு செய்தார்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img