தப்ளீக் ஜமாஅத் விவகாரம்: அரசும் காவல் துறையும் துணிந்து நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

muslim - 2026

தமிழக அரசே! காவல்துறையே… பயப்பட வேண்டாம்! துணிந்து நடவடிக்கை எடு! மக்கள் உயிரைக் காப்பாற்று! என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தப்லிக் ஜமாத் அமைப்பு மற்றும் அதற்கு ஆதரவாக செயல் படுகின்ற கம்யூனிஸ்ட் திராவிடர் கழகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்! கொரோனா உள்ளே வந்தது… மசூதிகளில் உள்ளே இருந்த தப்ளீக் இஸ்லாமிய மத குருமார்கள் வெளியே வந்தனர்!

இத்தனை மாநிலங்களில் எதற்காக வந்தார்கள் என்பது ஒரு கேள்வி… தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மசூதிகளில் இவர்கள் இருந்தது அதிர்ச்சியை மற்றும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது!

தப்ளீக் பாகிஸ்தானில் தடைச் செய்யப்பட்ட மதம் என்பது அதிர்ச்சியான செய்தியாகும்… ஏனெனில் முதல் முறையாக 1926 ஆம் ஆண்டு மேவாட் பகுதியில் இந்த தப்ளீக் ஜமாத் இஸ்லாமிய அமைப்பு இருந்தது தான், பாகிஸ்தான் தடை செய்துள்ளது… இந்த தப்ளீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள்.

ஜகார்த்தா தப்ளீக் மாநாடு… கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் மார்ச் 18 ந்தேதி இந்தோனேஷியா ஜகார்த்தாவில் தப்ளீக் ஜமாத் இஸ்லாமிய மாநாடு நடந்தது… மலேசியாவில் கொரோனா… இந்த மாநாடு நடந்த பின்னர் தான் மலேசியா கோலாலம்பூர் மசூதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா பாஸிடிவ் தெரியவந்துள்ளது…. தெலுங்கானா… கரீம்நகர்…
கொரோனா வைரஸ் தொற்று பாஸிடிவ் உள்ள இந்தோனேஷியா தப்ளீக் ஜமாத் இஸ்லாமிய மத குருமார்கள் 10 பேர் தெலுங்கானா கரீம்நகர் மசூதிக்கு வந்தனர்…

இவர்கள் மார்ச் 13 ந்தேதி டெல்லியில் இருந்து வந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த 80 பேருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது… உள்ளூர் முஸ்லிம் மக்கள் உதவியுடன்
கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யாமல் கரீம்நகர் மசூதியில் தங்கியிருந்த 12 தப்ளீக் ஜமாத் இஸ்லாமிய மாநாடு மத குருமார்கள் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கிறார்கள்…

பீகாரில்… பாட்னாவில்… கிர்கிஸ்தானிலிருந்த வந்து 10 முஸ்லிம் மௌல்விகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் மசூதிகளில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது… உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பிறகு பாட்னா குர்ஜி மசூதியில் மறைத்து வைத்திருந்த இந்த கிர்கிஸ்தானின் 10 முஸ்லிம் மௌல்விகள் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது…

tabliqjamat2 - 2026

மேலும் கத்தாரில் இருந்து திரும்பி வந்த 38 வயதான சயீப் அலி பீகாரில் பலியானார்… ராஞ்சியில்…. சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளில் இருந்து வந்த 11 முஸ்லிம் மௌல்விகள் ராஞ்சி மசூதிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தங்களது கட்டுப்பாட்டில் காவல்துறையினர் கொண்டு வந்து இருக்கிறார்கள்…

தமிழகத்தில்… ஈரோட்டில்… 5 தப்ளீக் ஜமாத் முஸ்லிம் மௌல்விகள் ஈரோட்டில் பிடிபட்டனர்… இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது… இவர்கள் தொழுகைக்கு சென்று வந்த புது மசூதி மற்றும் கொல்லம்பாளையம் மசூதி சீல் வைக்கப்பட்டது…
இவர்கள் சென்று வந்த 9 வீதிகள் மூடப்பட்டது…

1,200 க்கும் மேற்பட்டவர்கள் தனிமைபடுத்தி கண்காணிப்பு செய்து வருகின்றனர். இவர்கள் வீடுகளில் கொரோனா தொற்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன… சேலத்தில்… 11 இந்தோனேஷியா தப்ளீக் ஜமாத் இஸ்லாமிய மௌல்விகள் சேலம் மசூதிகளில் வந்துள்ளனர்… இதில் 4 தப்ளீக் மௌல்விகள் மற்றும் உடன் வந்த கைடு என 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாஸிடிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டது…

musilims - 2026

இவர்கள் சென்று வந்த கிச்சிபாளையம், அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, எருமைபாளையம் மசூதிகளில் சீல் வைக்கப்பட்டது….இந்தோனேஷியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான் நாடுகளில் இருந்து வந்த
50 முஸ்லிம் மௌல்விகள் தனிமைபடுத்தி வைக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் டெல்லியில் இருந்து வந்தவர்கள். மேலும் இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் சென்னை, காஞ்சீபுரம்,
செங்கல்பட்டு, அதிராம்பட்டினம் இடங்களில் உள்ள பல மசூதிகளுக்கும் மற்றும் பல வீடுகளுக்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…

ஆம்பூரில்… 12 இந்தோனேஷியா, 8 பர்மா, 15 குஜராத் முஸ்லிம் மௌல்விகளுக்கு என 35 முஸ்லிம் மௌல்விகள் ஆம்பூரில் தங்கி இருந்தார்கள்…

மகாராஷ்டிரா… சந்திரபூர்… கிர்கிஸ்தானிலிருந்து 11 தப்ளீக் ஜமாத் மௌல்விகள் சந்திரபூர் மசூதிக்கு வந்தனர்… இவர்களுடன் டெல்லி, ஒரிசா, கேரளா இஸ்லாமிய மௌல்விகள் உடன் இருந்தனர்… தற்போது இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்… இப்படி பல்வேறு இடங்களுக்கு வந்த தப்ளீக் ஜமாத் இஸ்லாமிய மத குருமார்கள் குறித்து உள்ளூர் மக்கள் தான் காவல்துறையினருக்கு தகவல்கள் தந்துள்ளார்கள்…

tabliqjamat1 - 2026

உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொரோனா தொற்று பரிசோதனை செய்து தனிமைபடுத்தி கண்காணித்து வருகின்றனர்……

இப்படி தப்ளீக் ஜமாத் இஸ்லாமிய மௌல்விகள் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு வந்தது குறித்து பல்வேறு பத்திரிகை செய்திகள் மற்றும் ஊடகங்கள் ஒளிபரப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது…

இவர்கள் விசாவில் என்ன அனுமதி தரப்பட்டுள்ளது என்றால்….
மதப் பிரசாரம் மற்றும் மத மாற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தெளிவாக அறிவிக்கிறது…

தப்ளீக் என்பது அரேபியா மொழியில் மக்களை அடைவது அதாவது இஸ்லாம் மத பிரசாரம் செய்வது என்று அர்த்தம் ஆகிறது… இப்படி பிரசாரம் செய்யக்கூடாது என்று ஏற்கனவே சட்டத்தில் தடை உள்ளது… பின்னர் எப்படி இவர்களுக்கு விசா வழங்கப்பட்டது என்பது ஒரு கேள்விக்குறி?….

மேலும் இவர்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரி கூடவே இருந்துள்ளார்… அப்படி என்றால் கூடவே இருந்த கண்காணிப்பு அதிகாரிக்கு தெரிந்து தான் இதெல்லாம் நடந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது… மகாராஷ்டிரா நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே, தப்ளீக் ஜமாத் இஸ்லாமிய மௌல்விகள் இந்தியா வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்…

இவர்கள் தங்கியிருந்த பல்வேறு மசூதிகளுக்கு சென்று காவல்துறையினர் ஆய்வு செய்ய முடியாத நிலை தான் உள்ளது… இந்த நிலையில் தப்ளீக் ஜமாத் இஸ்லாமிய மௌல்விகள் இந்தியா வந்துள்ளது சந்தேகத்திற்கு இடமளித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசாங்கத்தின் உளவுத்துறை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும்.

தப்லீக் ஜமாத் அமைப்பு மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படுகின்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

இத்தகைய இஸ்லாமிய மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி ஊடகங்கள் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை/ புகார் மனு, பணிந்து சமர்ப்பிக்கப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories