விளையாட்டு வீரர்கள் விளக்கேற்றி வேண்டுதல்! கூடுதல் பிரார்த்தனை செய்த கோஹ்லி!

virat 1 - 2026

பிரதமர் வேண்டுகோளை ஏற்று இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றினர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனிடையே மக்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு, வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுங்கள், அல்லது டார்ச், அலைபேசி ஒளியை ஒளிரச் செய்யுங்கள்,’ என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 5ம் தேதி இரவு 9:00 மணிக்கு இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் விளக்கேற்றினர். இந்திய அணி கேப்டன் கோஹ்லி, மனைவி அனுஷ்கா சர்மா விளக்கேற்றினர். இதற்கான போட்டோவை ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்டார்.

எல்லோரும் ஒற்றுமையாக பிரார்த்திக்கும் போது அது வித்தியாசத்தை ஏற்படுத்தும், நல்ல பலனைக் கொடுக்கும். ஒவ்வொரு உயிர்களுக்காகவும் ஒன்று சேர்த்து பிரார்த்தனை செய்யுங்கள். பலர் தங்களது குடும்பத்தினரை இழந்து வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலரது வாழ்க்கை முற்றிலும் தலைகீழாகி விட்டது. மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் தங்களது எதிர்காலம், வேலை உறுதியில்லாத நிலையிலும் சோர்வடையாமல், மற்றவர்கள் உயிர்களை காப்பாற்ற துணிச்சலாக போராடுகின்றனர்.

virat - 2026

இவர்கள் அனைவரது துன்பங்களும் முடிவுக்கு வர வேண்டும். எல்லோருக்காகவும் கூடுதலாக பிரார்த்தனை செய்தேன். இந்தியா முழுவதும் ஒருவருக்கு ஒருவர் பிரார்த்தனை செய்துள்ளோம். நமது வேண்டுதல் வீண் போகாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல இந்திய வீரர்கள் அஷ்வின், சேவக், ரெய்னா, ஹர்திக் பாண்ட்யா, ஷிகர் தவான், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சிந்து (பாட்மின்டன்), மேரி கோம் (குத்துச்சண்டை), சுஷில் குமார், யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்), ஹிமா தாஸ் (தடகளம்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்) தங்களது வீடுகளில் விளக்கேற்றினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories