கொரோனா: ஆதரவற்றோர் முகாமில் ஆயிரத்தில் ஒருவன் படம்!

nellai 1
ஆதரவற்றோர். நெல்லை

நெல்லையில் ஆதரவற்றோர் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமில் மன அழுத்தத்தைப் போக்க எம்ஜிஆர் திரைப்படம் திரையிடப்பட்டது.

கொரோனா ஊரடங்கு, சாலைகளில் திரிந்த ஆதரவற்றோருக்கு தலைக்கு மேல் கூரையையும் மூன்று வேளைக்கும் உணவையும் சுத்தமான தண்ணீரையும் உறுதி செய்துள்ளது. ஆம், மாநிலம் முழுவதுமே அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆதரவற்றோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைப்பட்டுள்ளனர்.

சாலையில் திரிபவர்கள் தொற்றுக்கு உள்ளாகிவிடக் கூடாது என்பதற்காகவும் அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு மீட்கப்பட்டவர்களுக்கு உணவும் இடமும் மட்டும் போதாது நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடப்பவர்களுக்கு ஆசுவாசப்படுத்த பொழுது போக்கு அம்சமும் வேண்டும் என்பதால், நெல்லையில் ஒரு முகாமில் திறந்த வெளியில் சினிமா திரையிடப்பட்டது.

nellai
ஆதர்வற்றோர் நெல்லை

நெல்லை மாவட்டம் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 107 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரு மாத காலமாக அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி முகாமில் உள்ளவர்களின் மன அழுத்தம் போக்க நேற்று இரவு திறந்த வழி திரையரங்கு ஏற்பாடு செய்து எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
nellai 2
ஆதரவற்றோர் நெல்லை

அவர்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு திரைப்படத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரைப்படத்தை காணும் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. முகாமில் இருந்தவர்கள் திரைப்படம் பார்ப்பது தங்களுக்கு ஆறுதலாக இருந்ததாகக் கூறினார்கள். தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லை மாநகராட்சி முகாமில் திரைப்படம் திரையிடலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர அன்றாடம் அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories