இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திர வெய்யில்!

summer
summer

கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் திங்கள் கிழமை இன்று தொடங்குகிறது! அக்னி நட்சத்திரக் காலம் வரும் மே மாதம் 28ம் தேதி வரை தொடரும். இதை அடுத்து வழக்கம் போல் இந்த மாதம் வெயில் சுட்டெரிக்கும். முற்பகல் 11 மணி முதல் பகல் 4 மணி வரை அனல் காற்று வீசுவதுடன், கடும் வெப்பம் நிலவும். இந்த நேரத்தில் வெளியில் அலைவதைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

கத்திரி வெயில் காலமான அக்னி நட்சத்திர காலத்தில், தென் மாநிலங்களில் கடும் வெப்பம் இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெயில் சுட்டெரிக்கும். ‘அக்னி நட்சத்திர காலத்தில் மற்ற நாட்களை விட வெயில் அதிகமாக இருக்கும்! ஜோதிட ரீதியில் இதனை குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கு சில புராணக் கதைகளும் உண்டு. அக்னியின் கோரப் பசிக்கு இந்தக் காலத்தில் அர்ஜுனன் வனத்தை எரித்தான் என்று பாகவத புராணத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. எனவே இது காலங்காலமாக இயற்கையின் அடிப்படையில் வருவதுதான்.

heat waves in train
file pic

இந்தக் கோடைக்காலம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதால், அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். இருப்பினும் வறண்ட வானிலையே நிலவும். கடலோரம் அல்லாத தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பச் சலன மழை பெய்யக் கூடும். சென்னையில் அதிகபட்சமாக, 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும். கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும்! எனவே முற்பகல் 11 மணி முதல், பகல் 3:30 வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் தமிழகத்தில் கோடைக் காலம். ஜூன் மாதத் தொடக்கத்தில் தான் தென்மேற்குப் பருவமழை தலை காட்டும். கேரளத்தில் தொடங்கும் இந்த மழை, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் என தென்மேற்குப் பருவமழையாக மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் வெளுத்துக் கட்டும். தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் வரை இந்த மழை பரவும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Topics

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Entertainment News

Popular Categories