April 19, 2025, 4:06 AM
29.2 C
Chennai

ஆயிரம் பஸ் விவகாரம் ஒரு குரூரமான நகைச்சுவை; பிரியங்கா வத்ராவை வறுத்தெடுக்கும் காங். எம்.எல்.ஏ., அதிதி சிங்!

athithi singh

இடம் பெயர்ந்து வேற்று மாநிலங்களில் வசித்து வந்த தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருப்பதாக பிரியங்கா வத்ரா மேற்கொண்ட அரசியல் நடவடிக்கை இப்போது அவரது சொந்த கட்சி எம்.எல்.ஏ., மூலமே கடும் விமர்சனத்தைச் சந்தித்திருக்கிறது.

நேரு வழி ‘காந்தி’ குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்ட ரேபரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ, அதிதி சிங், உத்தரப் பிரதேசத்தில் ஆயிரம் பேருந்து விவகாரத்தில் தனது சொந்தக் கட்சியை மீண்டும் குதறித் தள்ளியுள்ளார். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அனுப்பப்பட வேண்டிய பேருந்துகளில் பெரும்பாலானவை சிறிய வாகனங்கள் என்றும் இது என்ன கொடூரமான நகைச்சுவை என்றும் கேட்டுள்ளார் அதிதி சிங்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் தனது டிவிட்டர் பதிவில், “ஒரு பேரழிவின் போது இத்தகைய மோசமான மலின அரசியலின் தேவை என்ன? ஒரு 1,000 பேருந்துகளின் பட்டியல் கேட்டு அதுவும் அனுப்பப்பட்டது. ஆனால் அந்தப் பதிவு எண்களில் பாதிக்கும் மேற்பட்டவை போலியானவை, 297 குப்பை பேருந்துகள், 98 ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள், 68 வாகனங்கள் எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்தன. இது என்ன கொடூரமான நகைச்சுவை? பேருந்துகள் இருந்தால் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவுக்கு ஏன் அனுப்பவில்லை? ”

ALSO READ:  சோழவந்தான் உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா விளக்கு பூஜை!

கொளுந்து விட்டு எரிகின்ற இந்த சர்ச்சையில் எண்ணெயைச் சேர்த்தது போல், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் மேலும் கூறுகையில், “உ.பி.யிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் கோட்டாவில் சிக்கித் தவிக்கும் போது பேருந்துகள் என்று அழைக்கப்படுபவை எங்கே போயின? பின்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசாங்கத்தால் இந்தக் குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட முடியவில்லை, அவ்வளவு ஏன்… எல்லையில் கூட அவர்களை விட்டுவிட முடியவில்லை. பின்னர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் அவர்கள் இரவு முழுதும் செலவு செய்து, மீண்டும் பேருந்துகளில் அவர்களைக் கொண்டு வந்தார். ராஜஸ்தான் முதல்வரும் அதை பாராட்டினார். ”

ALSO READ:  “நீங்கள் ஒரு மோசடிப் பேர்வழி”: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா வத்ரா, உத்தர பிரதேசத்தில் உள்ள சொந்த இடங்களுக்குத் திரும்ப விரும்பும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல 1,000 பேருந்துகளை அனுப்புவதாகவும் அவை எல்லையில் காத்துக் கொண்டிருப்பதாகவும் தயாராக இருப்பதாகவும் சொன்னார். இதனால், பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்தது. இதையடுத்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த வாய்ப்பை ஏற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் நொய்டா மற்றும் காசியாபாத்துக்கு பேருந்து குறித்த தகவல்களை அனுப்புமாறு பிரியங்கா காந்தியிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால் உ.பி. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், காங்கிரஸ் அனுப்பிய பேருந்துகளின் பதிவு எண்கள் பல இரு சக்கர வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் அல்லது போலி எண்கள் என்று கூறினார்.

இதற்கிடையில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு மற்றும் பிரியங்கா வாத்ராவின் செயலாளர் மீது செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்ற வாகனங்களின் எண்ணிக்கையைக் கொண்ட தங்களது பட்டியலில் உள்ள வாகனங்கள் குறித்த உ.பி. அரசாங்கத்தின் கூற்றை காங்கிரஸ் நிராகரித்தது, பேருந்துகளை நேரடியாக சரிபார்க்கலாம் என்று சவால் விடுத்தது. அந்நிலையில், மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், காங்கிரஸ் பட்டியலில் சுமார் 100 வாகனங்கள் பேருந்துகளே அல்ல என்று கூறினார். இந்த சர்ச்சை உபி., அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ALSO READ:  உபவாசம் ஒரு தவம்: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories