பானிபூரி சாப்பிட்ட 40 குழந்தைகள்… ‘ஆஸ்பத்திரியில் அட்மிட்’!

Published:

ponipuri telangana
ponipuri telangana

பானிபூரி தின்ற 40 குழந்தைகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இது குறித்து ஹெச்ஆர்சியில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

தெலங்காணா மாநிலம் அதிலாபாத் நகரில் பானிபூரி தின்ற 40 சிறு குழந்தைகளின் உடல்நிலை கோளாறுக்கு ஆளாகி உள்ளது. இது குறித்து சிறுவர் உரிமை சங்கம் தீவிரமாக கண்டித்துள்ளது. மனித உரிமை சங்கத்திற்கு புகார் அளித்துள்ளது.

அதிலாபாத் நகரில் பானிபூரி தின்ற 40 பேர் உடல்நலக் குறைவுக்கு ஆளானார்கள்.

panipuri telangana
panipuri telangana

நாடு முழுவதும் லாக்டௌன் அமலில் இருக்கும்போது நகரில் பானி பூரியை எவ்வாறு விற்றார்கள் என்று அதிலாபாத் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்கு முனிசிபல் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று சிறுவர் உரிமை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கு பொறுப்பானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு நல்ல விதமான சிகிச்சையை அரசாங்கச் செலவில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனித உரிமை சங்கங்கள் மனு அளித்துள்ளன.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

அதிலாபாதிலுள்ள குர்ஷித்நகர், சுந்தரையா நகர் காலனிகளைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் சாலையை ஒட்டியுள்ள ஒரு வண்டி மீது பானி பூரி வாங்கித் தின்றார்கள். வீட்டுக்குச் சென்றவுடன் மாலையிலிருந்து அவர்களுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஆரம்பித்தன. ஃபுட் பாய்சன் ஆனதால் ஒருவர் பின் ஒருவராக மொத்தம் 40 குழந்தைகள் ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு உயிருக்கு அபாயம் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள்.

panipoori
panipoori

கரோனா தடுப்பிற்காக லாக்டௌன் விதித்துள்ள நிலையில் அதிலாபாத் நட்டநடு நகரில் கலப்படம் மிகுந்த தின்பண்டங்களை விற்பதற்கு அனுமதி எவ்வாறு அளித்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

தெலங்காணாவில் நடந்த அதிலாபாத் பானி பூரி சம்பவம் பின்னணியில் ஆந்திர பிரதேஷ் அரசு எச்சரிக்கை அடைந்து உள்ளது. ஆந்திராவில் பானிபூரி விற்பனைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img