December 7, 2025, 2:30 AM
25.6 C
Chennai

திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த 44 வயது பெண்மணி! தாயும் மகனும் கைது!

marriage mosati

ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் மாளவிகா தேவ்டி. 44 வயது நிறைந்த இவரது மகன் வெங்கடேஸ்வரா பிரணவ் லலித் கோபால். 22 வயது நிறைந்த இவர் படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து திருமண இணையதளத்தில் கீர்த்தி மாதவேணி என்ற பெயரில் போலியான ஐடி ஒன்றை தொடங்கியுள்ளனர். மேலும் அதில் மணமகள் போல் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாளவிகா வெளிநாட்டில் உள்ள பல இளைஞர்களிடம் திருமணம் செய்துகொள்வதாக, அவர்களை கவரும் வகையில் பேசி பண மோசடி செய்து வந்துள்ளார். இவ்வாறு அவர் சமீபத்தில் கலிபோர்னியாவில் பணிபுரிந்துவந்த வருண் என்பவரிடமும் பேசி பழகியுள்ளார்.

அப்பொழுது அவர் வருணிடம் தான் பெரிய மருத்துவர், எனக்கு நிறைய சொத்துக்கள் உள்ளது. ஆனால் என் தந்தை இறந்தபிறகு என் பெயரில் உள்ள சொத்துக்களை மாற்றித்தருமாறு தாய் கொடுமை படுத்திவருகிறார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதற்கு 65 லட்சம் பணம் தேவைப்படுகிறது. வழக்கு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வோம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய வருண் அவர் கேட்ட பணத்தை மாளவிகாவிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் அதற்குப் பின்னர் வருணால் மாளவிகாவை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில் தான் ஏமாந்ததை உணர்ந்த வருண் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மாளவிகா மற்றும் அவரது மகன் இருவரையும் கைது செய்தனர். இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories