ஏமனில் இருந்து 670 இந்தியர்கள் நாடு திரும்பினர்; இதுவரை 2,300 பேர் மீட்பு

Published:

yeman-rescued-indiansபுது தில்லி: உள்நாட்டுப் போர் மூண்டுள்ள ஏமன் நாட்டில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இன்று 670 பேர் நாடு திரும்பினர். இவர்களில் 488 பேர் சனாவில் இருந்து மூன்று ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இதுவரை 2300 பேர் ஏமன் நாட்டில் இருந்து பத்திரமாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர். அவற்றில் இன்றைய தினம் மிக அதிக அளவிலான நபர்கள் அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நடவடிக்கைக்காக, ஏர் இந்தியாவுக்கு வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதற்கு ஆபரேஷன் ரஹத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த போது, 3 விமானங்களில் 488 பேர் சனாவில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இது ஒரே நாளில் நிகழ்ந்த மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை என்றார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் முலம் ஏழு நாடுகளில் இருந்து 182 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். சில பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை மதியத்தில் இந்தக் கப்பல் இந்திய எல்லையை அடையுமாம். முன்னாள் தலைமைத் தளபதியும் தற்போதைய எம்.பி.யுமான வி.கே.சிங் ட்விட்டரில் தெரிவித்த தகவல்….  

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img