விவசாயிக்கு கிடைத்த பத்மஸ்ரீ: அமெரிக்க அதிபர் பாராட்டிய திராட்சை ரத்னா!

Published:

farmer chinthala venkat reddy - 2026

விவசாயிக்கு கிடைத்த பத்மஸ்ரீ: அமெரிக்க அதிபர் பாராட்டிய திராட்சை ரத்னா.! பத்மஸ்ரீ விருது பெறும் சிந்தல வெங்கடரெட்டி ( 69) இயற்கை விவசாயத்தில் அயராது உழைப்பவர். சொந்த ஊர் செகந்திராபாத்தில் உள்ள ஆல்வால்.

வெங்கட ரெட்டி இயற்கை விவசாய முறையில் பயிர் செய்து பலப்பல ரெக்கார்டுகளை ஏற்படுத்தியுள்ளார்.திராட்சை சாகுபடியில் புதிய முறையை கண்டறிந்தவர். திராட்சை ரத்னா என்று புகழப்படுபவர்.

இவர் விளைவித்த திராட்சைப் பழங்களை இரு அமெரிக்க அதிபர்கள் ருசி பார்த்து உள்ளார்கள் என்பது சிறப்பு.

2001ல் ஹைதராபாத் சுற்றிப்பார்க்க வந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுக்கும், 2006ல் ஹைதராபாத் வருகை தந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கும் தாம்சன் ப்ளேம், பிளாக் சீட்லெஸ் திராட்சைப் பழங்களை 30 கிலோ வீதம் கொடுத்தனுப்பினார் வெங்கடரெட்டி.

எப்படிப்பட்ட ரசாயன எருவும் பயன்படுத்தாமல் பூமியில் இருந்து எடுத்த மண்ணைக் காயவைத்து பலமுறை பயிர்களுக்கு இட்டு அவற்றின் மூலமே மிக அதிக மகசூலை சாதித்துள்ளார். இவ்விதமாக இவர் அன்ப்-ஹீஷாஹி சீட் திராட்சை பயிரிட்டு ஹெக்டாருக்கு 105 டன் மகசூல் சாதித்து உலக ரெக்கார்டு ஏற்படுத்தினார். அதேபோல் ஹெக்டாருக்கு 85 டன் தாம்சன் சீட்லெஸ் திராட்சை சாகுபடி செய்தார். அதேபோல் நெல் வகையில் பிபிடி 5204 வகையை பயிரிட்டு ஹெக்டாருக்கு 10.81டன் சாகுபடியை சாதித்தார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

” எனக்கு இதுவரை நிறைய விருதுகள் வந்துள்ளன. இப்போது மத்திய அரசு என்னை கௌரவித்து பத்மஸ்ரீ விருது அளித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது விவசாயிகளுக்கு மத்திய அரசு அளிக்கும் கௌரவமாகவே நினைக்கிறேன்” என்று வெங்கட ரெட்டி தெரிவித்தார்.

மண்ணே எருவாகவும் மண்ணே பூச்சி மருந்தாகவும்… பயிரிடுபவர் சிந்தல வெங்கடரெட்டி. இவர் 40 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். சர்வதேச பேடென்ட் பெற்ற முதல் இந்திய விவசாயியாக விளங்குகிறார்.

நிலத்தை தோண்டி மண்ணை வெளியே எடுத்து வெயிலில் காய வைத்து அதையே பயிர்களுக்கு எருவாக இடுவார். அதுமட்டுமின்றி… அதே மண்ணை நீரில் கரைத்து பயிர்களின் மேல் பூச்சி மருந்தாகப் பீச்சடிப்பார். இதன் மூலம் உலகமே இவரை திரும்பி பார்த்தது.

திராட்சை சாகுபடியில் புதிய பிரயோகங்கள் முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார். கீசரிகுட்டா அருகில் உள்ள குந்தனபல்லியில் இவருக்கு திராட்சை தோட்டம் உள்ளது. ஆல்வாலில் ரிசெர்ச் பார்ம் உள்ளது.

விட்டமின் ஏ, சி உள்ள அரிசியை விளைவித்துள்ளார். மாலைக்கண் நோயை விரட்டும் பயிர்களைப் பயிரிடும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள பத்மா அவார்டு பெறுபவர்களில் ஐவர் தெலுங்கர்கள் என்பது சிறப்பு.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img