![போனாலு பண்டிகையை நிறுத்தினால் விபரீதம் ஏற்படும்! எச்சரிக்கிறார்கள்! 1 bonalu function telangana](https://dhinasari.com/wp-content/uploads/2020/06/bonalu-function-telangana-1.jpg)
- முதல்வர் கேசிஆருக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்.
- போனாலு பண்டிகை யை நிறுத்தினால் அனர்த்தங்கள் நிகழும்… எச்சரிக்கை.
தெலங்காணாவில் போனாலு கொண்டாட்டங்களுக்கு பிரத்தியேகமான சிறப்பு உண்டு. ஆஷாட மாதம் வந்தது என்றால் போதும்… செகந்திராபாத் உஜ்ஜயினி மகாகாளி ஆலயத்தில் போனாலு பண்டிகை களை கட்டத் தொடங்கிவிடும். அதன்பின் பாக்கியநகரத்தில்… அதன்பின் ஒவ்வொரு கிராமத்திலும் போனோம் தயாரித்து அம்மனுக்கு படைப்பார்கள்.
ஆனால் கரோனாவால் இந்த ஆண்டு போனாலு பண்டிகை கொண்டாட்டங்கள் நிர்வகிப்பது கடினமானது. ஆனால் போனாலு செய்யத்தான் வேண்டும் என்கிறார் காங்கிரஸ் சீனியர் தலைவர் வீ. ஹனுமந்தராவு.
முதலமைச்சர் கேசிஆருக்கு கடிதம் எழுதிய அவர் போனாலு பண்டிகையின் மீது நிபந்தனைகள் போட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தேவை என்றால் போத்தராஜு, பலகாரம் வண்டி… இவற்றை மட்டும் நிறுத்தி வையுங்கள். ஆனால் பெண்கள் அம்மனுக்கு போணம் சமர்ப்பிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்.
போனம் சமர்ப்பித்தால் தான் கரோனா போகும். கடந்த காலத்தில் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்ததால் தான் பிளேக் வியாதி குறைந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. போனாலு நிறுத்தி வைத்தால் அனர்த்தங்கள் நிகழும். அம்மனுக்கு கோபம் வந்தால் பிரளயம் வரும் என்று முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்றார் விஹெச்.