போபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்!

mankal

போபோஸ் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவை படம் எடுத்து அனுப்பியுள்ளது இந்திய விண்கலமான மங்கள்யான். இஸ்ரோவால், 2013 நவம்பர் 5ஆம் தேதி ஆளில்லாத விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் மங்கள்யான் என்று அழைக்கப்படுகிறது. இது செவ்வாய் கோளில் ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் 2014 செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.

இந்த விண்கலத்துடன் கலர் கேமராவும் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த கேமரா தற்போது அரிய புகைப்படம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதாவது செவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.

இந்தப் படத்தை ஜூலை ஒன்றாம் தேதி விண்கலம் எடுத்துள்ளது. செவ்வாய் கோளில் இருந்து 7,200 கி. மீட்டர் தொலைவிலும், போபோஸ் சந்திரனிடமிருந்து 4,200 கி. மீட்டர் தொலைவிலும் இருந்து இந்தப் புகைப்படத்தை விண்கலம் எடுத்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டு இருக்கும் இஸ்ரோ, ”இந்தப் புகைப்படத்தின் அளவு 210 மீட்டராக இருக்கிறது. இது கம்போஸ் செய்யப்பட்ட புகைப்படம். 6 MCC பிரேமில் எடுக்கப்பட்டது. வண்ண நிறங்களில் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இந்த போபோஸ் சந்திரன் விண்கற்களால் ஆனது என்றும், இதில் தண்ணீர் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. கடந்த கால விண்கற்கள் மோதலில் இருந்து இந்த கோள் உருவாகி இருக்கலாம் என்று இஸ்ரோ நம்புகிறது.

துவக்கத்தில் இந்த மங்கள்யான் விண்கலம் ஆறு மாதங்களுக்கு மட்டும்தான் செயல்படும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது. ஆனால், அதில் போதிய எரிவாயு இருப்பதால், பல ஆண்டுகளுக்கு செயல்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அங்கு இருக்கும் தாதுக்கள் மற்றும் மீத்தேன் குறித்து ஆய்வு மேற்கொள்ள மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது. ரஷ்யா, அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக செவ்வாய் கோளை அடைந்த நான்காவது விண்கலமாக மங்கள்யான் உள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories