ஏடிஎம் இல் தீ விபத்து! மொத்த சேதம் சுமார் ரூ .16 லட்சம்!

Published:

atm

அகமதாபாத்தின் ஜஷோதனகரில் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் தீ விபத்து ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜஷோதனகரில் உள்ள இந்தியன் வங்கிக்கு வெளியே இரண்டு பண விநியோக இயந்திரங்களும், ஒரு பாஸ் புக் பிரிண்டரும் இயந்திரமும் இருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால், ஏடிஎம்-க்கு அடுத்ததாக அமைந்துள்ள வங்கி கிளைக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இந்த விபத்தில் மொத்த சேதம் சுமார் ரூ .16 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரூ .10 லட்சம் மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img