December 5, 2025, 7:02 PM
26.7 C
Chennai

அதிர்ச்சி பப்ஜி கேம் மோகம்! தாத்தாவின் ஓய்வூதிய பணத்தில் ரூ.2 லட்சம் அபேஸ் செய்த சிறுவன்!

pubg

பஞ்சாபில் 15 வயது சிறுவன், பப்ஜி விளையாடுவதற்காக தனது தாத்தாவின் ஓய்வூதிய பணத்தில் ரூ. 2 லட்சத்தை செலவழித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் மத்தியில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. அவர்கள் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது அவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு என்பதை தாண்டி, அவர்கள் அதில் மூழ்கி விடுகின்றனர். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், பப்ஜி விளையாட்டுக்காக தனது தாத்தாவின் ஓய்வூதிய பணத்தில் 2 லட்சம் ரூபாயை செலவழித்துள்ளார்.
அந்த சிறுவன் கடந்த ஜனவரி மாதம் முதல்தான் பப்ஜி விளையாட ஆரம்பித்துள்ளார்.

pubg

இதனையடுத்து விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், செயலியை அப்கிரேட் செய்வதற்காகவும், அதில் விளையாடுவதற்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்குவதற்கும் என அதிக பணத்தை செலவழிக்க ஆரம்பித்துள்ளார். இதற்காக கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ. 55,000 செலவழித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் பப்ஜியில் Unknown Cash பெறுவதற்காக Paytm பயன்படுத்தியுள்ளார். அதுவும் தனது தாத்தா பெயரிலேயே அந்தக் கணக்கை உருவாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட அந்த வங்கிக் கணக்கை குடும்பத்தினர் சோதனை செய்த போது பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இறுதியில் சிறுவனிடம் விசாரித்த போது உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனிடையே சிறுவனுக்கு இதுபோன்ற மோசடிகளை கற்றுக் கொடுத்த இளைஞர் ஒருவர் மீது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த விளையாட்டு தொடர்பாக அந்த இளைஞருக்கு சிறிது பணம் அனுப்பியதாகவும் சிறுவன் கூறியுள்ளார்.

முன்னதாக பஞ்சாபை சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி விளையாடுவதற்காக தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 16 லட்சம் செலவு செய்தது தெரியவந்தது. இந்தப் பணம் மருத்துவ செலவுக்காக சேமித்து வைத்திருந்தது என பெற்றோர் வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories