புது தில்லி: கைவினை மற்றும் கம்பளத் துறை திறன் மையம் என்ற புதிய நிறுவனத்தை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனிபொறுப்பு), நாடாளுமன்ற விவகார துறையின் இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி நாளை துவக்கி வைப்பார். 20வது கைவினை ஏற்றுமதி விருது வழங்கும் விழாவின் போது இந்த புதிய நிறுவனம் துவக்கி வைக்கப்படும். சமூதாயத்தின் அடித்தளத்தில் உள்ள கலைஞர்கள், கைவினை பொருட்கள் மற்றும் கம்பள பொருட்களின் ஊழியர்கள் ஆகியோரின் திறன் மேம்பாட்டை இந்நிறுவனம் ஊக்குவிக்கும். அவர்கள் மேம்பட்ட குறைகளை கையாளவும், உற்பத்தியை பெருக்கவும் இது உதவும். தொழில்சார் தரத்தை உயர்த்தவும், ஊழியர்கள் சந்தையில் உள்கட்டமைப்பை அமைப்பதும், சான்றிதழ் மற்றும் ஆய்வு முறையை அறிமுகப்படுத்துவதும், கலைஞர்களுக்கு கைவினை லைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டிற்கு அனைத்து விதமான வழிகாட்டுதல் அளிப்பது ஆகியவற்றிக்கு இந்த மையம் பொறுப்பாகும். இநத் மையம் புதுதில்லியில் இருந்து செயல்படும். பிரதமர் நரேந்திர மோடி திறன் மேம்பாட்டிற்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை வைத்து இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒரே மாதிரியான, சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திறன் மேம்பாட்டின் முக்கியதுவத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார். ஏற்கனவே, செப்டம்பர் 28, 2014ல் பிரதமர் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்ததாவது: திறன் மேம்பாட்டிற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுத்துள்ளோம். திறன் மேம்பாட்டிற்காக நாங்கள் தனி அமைச்சகம் அமைத்துள்ளோம். ஏற்கனவே ஆகஸ்ட் 31, டுவிட்டர் வலையதளத்தில் பிரதமர் தெரிவித்ததாவது:- இந்தியா இளைஞர்களின் தேசம் திறன் மேம்பாட்டிற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுப்போம். தரம், குறையோ அல்லா பொருள், ஒழுக்கம் என அனைத்துக்கும் நாங்கள் முக்கியதுவம் அளிப்போம்: பிரதமர் இதன் அடிப்படையில் இந்த மையம் நாளை ஆரம்பிக்கப்படுகிறது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனி பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகார துறையின் இணை அமைச்சர் இம்மையத்தை துவக்கி வைப்பார். மத்திய ஜவுளி துறையின் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்வார், மத்திய ஜவுளி துறையின் செயலர் திரு. எஸ்.கே. பாண்டா, கைவினை பொருட்கள் துறையின் வளர்ச்சி / மேம்பாட்டு ஆணையர் திரு. எஸ்.கே. பிஸ்வாஸ், தொழிற்துறையின் நிபுணர்கள், கைவினை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். புது தில்லியில், நாளை மாலை 6.30 மணிக்கு இந்த மையம் துவங்கப்படும்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

