புதுதில்லி: ராமஜென்ம பூமி அமைந்த பகுதியை பேணிக் காக்க கடந்த 20 வருடங்களில் மொத்தம் ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று கூறியுள்ளது. கடந்த 1994-95 ஆண்டு முதல் 2014-15 ஆண்டு வரை அயோத்தியில் உள்ள கைப்பற்றப்பட்ட சொத்துகளை பேணிப் பாதுகாக்க ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு கூறினார். அரசியலமைப்பின் 7வது பிரிவின்படி, போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கை மாநில விவகாரங்கள் என்றும், கைப்பற்றபட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, பாதுகாப்பை ஏற்படுத்துவது உத்தரப் பிரதேச அரசின் கையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
Popular Categories



