December 6, 2025, 10:16 PM
25.6 C
Chennai

ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை:மீனவர்களை சுட அதிகாரம் இருப்பதாக கூறுவதா?: ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மத்திய அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லைத்தாண்டி வருபவர்களை சுட்டுக் கொள்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாக தான் ஏற்கனவே கூறியிருந்ததில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் உறுதிபடக் கூறியிருக்கிறார். இது அவரது அதிகாரவர்க்கத்தைக் காட்டுகிறது. இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழக மீனவர்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்த இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் கேள்விக்குறியதாக அமைந்திருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம், மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்தவோ, கைது செய்யவோ கூடாது என்பதை உறுதிபடக் கூற வேண்டும். இந்தியப் பிரதமர் இனியும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசை கடுமையாக கண்டிப்பதோடு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்காமல் இருக்க, இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை நிறுத்த, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை பிரச்சினைகளின் தொடர மத்திய அரசு வழி வகுத்து தர வேண்டும்.என ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories