அமெரிக்க அதிபருக்கு அடுத்து இவரே!

Published:

modiji
modiji
  • பிரதமர் மோடி ஒரே இந்தியர்.
  • அமெரிக்கா ஜனாதிபதிக்கு அடுத்தது இவரே.

பாரத பிரதமர் நரேந்திர மோடி சோஷியல் மீடியாவில் மற்றுமொரு அற்புதமான பெருமையை சாதித்துள்ளார். பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி இன்று உலக அளவில் கூட லட்சக்கணக்கான அபிமானிகள் உள்ள விஷயம் தெரிந்ததே.

சோஷல் மீடியாவில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கியபடியே அரசியல், ஆட்சி அமைப்பு, சமுதாய அம்சங்களை அப்போதைக்கப்போது மக்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருப்பார்.

பிரபல சோசியல் மீடியா மேடையாக டிவிட்டரில் பிரதமர் மோடி மற்றுமொரு மைல் கல்லைத் தாண்டி உள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்டர் அக்கவுன்ட்டை தற்போது 60 மில்லியன் (6 கோடி) பேருக்கு அதிகமாக ஃபாலோ ஆகி வருகிறார்கள். இதனால் மிக அதிக அளவில் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ள உலக அரசியல் தலைவர்களில் நரேந்திர மோடி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

120 மில்லியன் ஃபாலோயர்ஸோடு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தில் இருக்கிறார். 83 மில்லியன் ஃபாலோயர்சோடு தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்தியாவில் பார்த்தால் மோடியே மிக அதிக அளவில் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ள ஒரே தலைவர் என்பது சிறப்பு.

குஜராத் முதல்வராக இருந்த சமயத்திலேயே 2009ல் நரேந்திர மோடி தனது டிவிட்டர் அக்கவுண்ட்டை தொடங்கினார். 2014 ல் மோடி பிரதமர் பதவியை ஏற்றபோது டுவிட்டரில் அவருடைய பாப்புலாரிட்டி இன்னும் அதிகமாகியது.

அதோடு அவருடைய ஃபாலோயர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிரதமர் அலுவலகத்தின் அதிகார டிவிட்டர் அகௌண்ட்டைக்கூட 37 மில்லியன் பேர் ஃபாலோ ஆகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img