December 6, 2025, 4:56 AM
24.9 C
Chennai

கூவத்தூர் ரிசார்ட் ஆனது பெங்களூரு: குஜராத் எம்.எல்.ஏ.க்களுடன் படாதபாடு படும் காங்கிரஸ்!

modi rahul - 2025

பெங்களூர்:
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக., இரண்டாக உடைந்து ஆட்சிக்குப் பிரச்னை எழுந்தபோது, எப்படி கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தங்க வைக்கப்பட்டு, நாடு முழுதும் பேசப்பட்டதோ, அதே போன்றதொரு காட்சி இப்போது குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வடிவில் அரங்கேறியுள்ளது.

குஜராத்தில் அடுத்த மாதம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. 3 மாநிலங்களவை இடங்களுக்கான போட்டியில் காங்கிரஸ் சார்பில் ஒரு இடத்துக்கு அகமது பட்டேல் போட்டியிடுகிறார். மற்ற இரண்டு இடங்களிலும் பாஜகவின் அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் காங்கிரஸின் முக்கியத் தலைவரும், கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த சங்கர் சிங் வகேலா, காங்கிரஸில் இருந்து விலகினார். அவருக்கு ஆதரவாக 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர்.

இதை அடுத்து தற்போது, மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும் நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளரான அகமது பட்டேலுக்கு எதிராக பாஜக வியூகம் அமைத்து வருகிறது. நேற்றும் இன்றும் மட்டும் 5 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்துள்ளனர். இவ்வாறு காங்கிரஸில் இருந்து பாஜக.,வில் இணைந்த எம்.எல்.ஏ பல்வாந்த் சிங் ராஜ்புத்-தையே காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜக. இதனால், சோனியா காந்திக்கு நெருக்கமானவராக இருக்கும் அகமது பட்டேலின் வெற்றி வாய்ப்பு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் சிலர் கட்சி மாறும் முடிவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதை அடுத்து, இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களைத் தக்க வைத்துக் கொள்ள, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 எம்.எல்.ஏ-க்களை அவசர அவசரமாக நேற்று இரவு குஜராத்தில் இருந்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவிற்கு அனுப்பிவைத்தது கட்சி மேலிடம்.

இதன்படி, இன்று காலை கர்நாடகா வந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை மேலும் 10 எம்.எல் ஏக்களும் அழைத்து வரப்பட்டனர். வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் மற்ற எம்.எல்.ஏ-க்களும் கட்சி மாறுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகத் தெரிகிறது. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிதான் குஜராத் திரும்புவார்கள் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதேபோன்று கூவத்தூர் சம்பவம் நடந்தபோது, திமுக.,வுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருந்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள், கூவத்தூர் விவகாரத்தை விமர்சித்து தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்தனர். விவாதம் செய்தனர். ஆனால், அதே போன்றதொரு செயலை தங்கள் கட்சியே இப்போது செய்துள்ளதை அவர்கள் நியாயப் படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories