December 11, 2025, 10:12 PM
25.5 C
Chennai

மாநிலங்களவையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் பாஜக!

wagela-modi

புது தில்லி:

மாநிலங்களவையில் முதல் முறையாக பாஜக., அதிக உறுப்பினர்களை கொண்டு, காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து, மிகப்பெரும் கட்சி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

காங்கிரஸ், மாநிலங்களவையில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது இதுவே முதல்முறை. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவி வருகிறது. இதுவே தற்போதைய நிலைக்குக் காரணம். அண்மைக் கால சட்டப் பேரவைத் தேர்தல்களில் அபார வெற்றி பெற்று வரும் மோடி – அமித்ஷா கூட்டணியால், மாநிலங்களவையில் முதன்மைக் கட்சி என்ற நிலையையும் பாஜக., எட்டிப் பிடித்துள்ளது.

தற்போது மாநிலங்களவையில் அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக.,வின் உறுப்பினர் எண்ணிக்கை, வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும். பாஜக., ஆளும் மாநிலங்களில், வரும் காலத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் கூடுதல் இடங்களை பாஜக., பெறும்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பழங்குடியினத் தலைவர் சம்பாதியா உய்கி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதையடுத்து பாஜக., எம்.பி.க்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. இது காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கையை விட ஒன்று கூடுதல்.

2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக., பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றே வந்தது. பாஜக., வின் தே.ஜ.கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி என 18 மாநிலங்களில் ஆட்சி நடைபெறுகிறது. 29 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தற்போது 6 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. மத்தியில் வாஜ்பாய் அரசு இருந்தபோதுகூட பாஜக.,வுக்கு மாநிலங்களவையில் 50க்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தனர்.

பொதுவாக, இது வரை மாநிலங்களவையில் பாஜக., கூட்டணிக்கு போதிய பலம் இல்லாமல் இருந்ததால், எதிர்க் கட்சிகளின் உதவியுடனேயே மசோதாக்களை நிறைவேற்றி வந்தது. வரும் 2018 மத்தியில் இந்நிலை மாறும். 2018 ஏப்ரலில் மாநிலங்களவையில் 57 உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில், 10 உறுப்பினர்கள் உபி., மாநிலத்தில் இருந்து தேர்வானவர்கள். இப்போது உ.பி.யில் பாஜக., ஆட்சியில் உள்ளது. அங்கே பாஜக.,வே 8 அல்லது 9 உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்யும். மபி., ராஜஸ்தான், பீகார், அரியானா உள்பட பாஜக., ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுவதால், உறுப்பினர் எண்ணிக்கை அதிகம் வரும். மேலும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளமும் பாஜக., கூட்டணியில் இணைந்துவிட்டதால், மாநிலங்களவையில் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளையும் எதிர்கொள்ளும் பலத்தை பாஜக., பெறும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories