ஏழைகளின் உயிர் காத்து சேவையாற்றிய 10 ரூபாய் டாக்டர்… கொரோனாவுடன் போராடி காலமானார்!

ten-rupee-doctor-passes-away
ten-rupee-doctor-passes-away
  • ஏழைகளின் உயிர் காத்து சேவையாற்றிய 10ரூ டாக்டர் சென்னையில் காலமானார்.
  • கொரோனாவோடு வீரத்தோடு போராடி சுவாசக்கோளாறு காரணமாக புதன்கிழமை காலை மரணமடைந்தார்.

டாக்டர் சி மோகன் ரெட்டி (84) ஏழை நோயாளிகளிடமிருந்து ஆலோசனைக்காக ரூ .10 மட்டுமே வசூலித்தார். மேலும் பல வெளிநோயாளிகளுக்கு இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார்.

கோவிட் -19 க்கு எதிராக துணிச்சலான போரை நடத்தி நகரத்தின் ‘ரூ .10 மருத்துவர்’ புதன்கிழமை அதிகாலை சுவாசக் கோளாறு காரணமாக மரணமடைந்தார்.

ஏழைகளுக்குச் செய்யும் இலவச சிகிச்சை மற்றும் சேவைகளால் நன்கு அறியப்பட்டவரான டாக்டர் சி மோகன் ரெட்டி (84) ஏழை நோயாளிகளின் நண்பராக விளங்கினார்.

டாக்டர் ரெட்டி ஜூன் 25 அன்று கோவிட் -19 க்கு கெய்துகொண்ட பரிசோதனையில் பாசிடிவ் வந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

dr-c-mohan-reddy
dr-c-mohan-reddy

“அவர் சில நாட்களுக்குப் பிறகு குணமடைந்துவிட்டார். இருப்பினும், புதன்கிழமை, அவர் திடீரென சுவாசக் கோளாறு காரணமாக இறந்தார், ’’ என்று அவருடைய சகோதரர் டாக்டர் சி.எம்.கே ரெட்டி தெரிவித்தார்.

மருத்துவர் ரெட்டி யின் மரணச் செய்தி பரவியபோது, ​​வில்லிவாக்கம் மற்றும் சுற்றுப்புறம், குறிப்பாக சேரிப் பகுதிகள் மீது துயர இருள் விழுந்தது.

“டாக்டர் ரெட்டி நோயாளிகளால் செலவுகளை தாங்க முடியாது என்று நினைத்தால் இலவசமாக சிகிச்சையளிப்பார்” என்று டாக்டர் ரெட்டியின் மருத்துவமனை செவிலியர் ஒருவர் கூறினார்.

1936 ல் நெல்லூரில் பிறந்த டாக்டர் ரெட்டி தனது ஆரம்பக் கல்வியை குடூரில் பெற்றார். பின்னர் கில்பாக் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். ரயில்வேயில் மருத்துவராக சிறிது காலம் பணியாற்றிய பின்னர், வில்லிவாக்கத்தில் மோகன் நர்சிங் ஹோம் தொடங்கினார்.

30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை அதைச் சுற்றியுள்ள ஏழை மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கியது.

தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பிரம்மசாரியாக தன் மருத்துவமனையிலேயே வாழ்க்கையைக் கழித்தார்.

அதனால் எந்த நேரத்தில் யாரும் சிகிச்சையை இழக்கவில்லை. “நாங்கள் அவரை வீட்டிற்கு வந்து ஊரடங்கின் போது எங்களுடன் தங்கச் சொன்னோம், ஆனால் அவரோ, ” “நான் வெளியேறினால் நோயாளிகளுக்கு யார் அங்கு இருப்பார்கள்?” என்று சகோதரர் டாக்டர் சி.எம்.கே ரெட்டி நினைவு கூர்ந்தார்.

“எங்கள் தாயார்கூட ஏழைகளுக்காகவே வாழ்ந்தார். அவரது முதுமை காலத்தில்கூட அவர் ஏன் மற்றவர்களுக்கு உதவ இவ்வளவு சிரமப்படுகிறார் என்று நான் அடிக்கடி தாயாரிடம் கேட்பேன். மற்றவர்களுக்கு உதவ முடியாவிட்டால், இன்னும் இரண்டு வருடங்கள் வாழ்ந்ததன் பயன் என்ன என்று என்னிடம் கேட்பாள். என் சகோதரர் அவளது அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்” என்று அவர் மேலும் கூறினார்.

டாக்டர் ரெட்டி, ஜூன் 23 அன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு, லாக்டௌனால் பாதிக்கப்பட்ட பல வறியவர்களுக்கு உணவு விநியோகித்தார்.

தன்னிடம் உதவி கேட்டு அணுகிய யாரிடமும் அவர் ஒருபோதும் இல்லை என்று சொன்னதில்லை என்று சி.எம்.கே.ரெட்டி கூறினார்.

“அவர் இப்பகுதியில் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனாதை இல்லங்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்கினார்,” என்று அவர் மேலும் கூறினார்.

டாக்டர் ரெட்டியின் பல தசாப்த கால சேவையை நினைவு கூர்ந்த அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கல்யாணம் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ரெட்டி பெரும்பாலும் வில்லிவாக்கத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் பள்ளிகளுக்கும் நன்கொடைகளை வழங்கினார் என்று கூறினார். அவரது பரோபகார சேவைகளுக்காக, டாக்டர் ரெட்டியை அப்போதைய தமிழக ஆளுநர் கே ரோசயா பாராட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories