December 5, 2025, 8:40 PM
26.7 C
Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன்: இந்திராவுக்குப் பின் ஒரு பெண் அமைச்சர்!

புது தில்லி:

மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. இந்திரா காந்திக்குப் பின்னர் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சர் ஆகியுள்ள பெண்மணி நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்தார். இன்று அவரது தலைமையிலான அமைச்சரவையில் 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும், தர்மேந்திர பிரதான், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகிய 4 இணை அமைச்சர்கள், சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப் பட்டனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய அமைச்சரவையில் மிகவும் முக்கியமான பதவியான பாதுகாப்புத் துறை, நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் முக்கியமான பொறுப்பை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பின்னர் இரண்டாவது முறையாக ஒரு பெண் பெற்றுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

தொடர் ரயில்வே விபத்துகளால் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுரேஷ் பிரபுவுக்கு பதில், பியூஸ் கோயல் ரயில்வே அமைச்சர் ஆகியுள்ளார். தர்மேந்திர பிரதான் பெட்ரோலிய துறையில் கேபினட்டுடன், கூடுதல் பொறுப்பாக திறன்மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் பிரபு வர்த்தகத் துறை அமைச்சர் ஆகியுள்ளார். சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு நதிநீர் மேம்பாட்டுத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகதைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், கப்பல் போக்குவரத்துத் துறையுடன், நிதித்துறையையும் கூடுதலாகப் பெற்றிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories