திருச்சியில் இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்: உயிருடன் மீண்ட குழந்தை!

திருச்சி:

திருச்சி மலைக்கோட்டையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்கு இடையில் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்டெடுக்கப் பட்டது.

திருச்சி மலைக்கோட்டையில் தஞ்சை குளத் தெருவில் 3 மாடி கட்டடம் அதிகாலை 3.45 மணி அளவில் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்து கட்டடம் முழுவதும் தரைமட்டமானது.

பெரும் சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ளவர்கள் வீதிக்கு ஓடிவந்தனர். வீடு தரை மட்டமானதைப் பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். அதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார், பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் சிறிது சிறிதாக அகற்றப்பட்டன. கட்டிடம் ஒரே நேர்கோட்டில் தரைமட்டமானதால் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

கட்டட இடிபாடுகளை அகற்றி வந்தபோது, திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் பொக்லைன் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நிறுத்தப் பட்டு, உடனடியாக அந்தக் குழந்தையை உள்ளிருந்து மீட்டனர். அங்காள பரமேஸ்வரி என்ற ஒன்றரை வயதுக் குழந்தை உயிருடன் மீட்கப் பட்டு அருகில் இருந்த ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை மீட்கப் பட்ட நிலையில், அதன் பெற்றோர் பழனி, ராஜாத்தி இருவரும் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப் பட்டனர்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

இந்தச் சம்பவத்தில் அந்தக் கட்டடத்தில் இருந்த கார்த்திக், ஹரீஷ் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். கட்டடம் இடிந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அந்தக் கட்டடம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று இரவு 7 மணி முதல் திருச்சி நகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் ரோட்டில் வேருடன் சாய்ந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இது குறித்து அறிந்ததும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்ய அறிவுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories