சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை; விஜயவாடா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published:

death sentence in vijaywada - 2026

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 7 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பெண்ட்டையா வுக்கு விஜயவாடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கிருஷ்ணா மாவட்டம் கொல்லப்பூடியில் சென்ற ஆண்டு மைனர் சிறுமி வன்முறை கொலை வழக்கில் விஜயவாடா ஸ்பெஷல் போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ட்டையாவை குற்றவாளியாக முடிவுசெய்து மரண தண்டனை விதித்துள்ளது.

2019 நவம்பர் 10ம் தேதி கொல்லப்புடி நல்லகுண்டாவுக்கு பெண்ட்டையா என்பவன் மகள் உறவு உள்ள 7 வயது சிறுமியை தூக்கிச் சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதன் பின் அவளுடைய உடலை சாக்கு பையில் திணித்து மனித சஞ்சாரமற்ற இடத்தில் வீசி எறிந்து உள்ளான்.

சிறுமி காணாமல் போனதால் பெற்றோர் சுற்றுப்புறமெங்கும் தேடியபோது பெண்ட்டையாவும் அவர்களோடு கூட தேடியுள்ளான். சாக்குப்பையில் சுற்றி குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டு விசாரித்தனர். பெண்ட்டையா மீது சந்தேகம் ஏற்பட்டு கேள்வி கேட்டு விசாரிக்கவே தானே குற்றம் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளான்.

அதனால் போலீசார் அதன் மீது சர்ஜ்ஷீட் தாக்கல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். 35 பேர் சாட்சியங்களை விசாரித்த பின் கோர்ட் அவனை குற்றவாளியாக முடிவு செய்தது. நீதிமன்றம் விதித்த பல்வேறு பிரிவுகளின் மீது குற்றவாளிக்கு 7 ஆண்டுகள், 20 ஆண்டுகள், ஆயுள் கைதி, மரண தண்டனை விதித்துள்ளதாக ஸ்பெஷல் பப்ளிக் பிராசிகியூட்டர் நாராயண ரெட்டி தெரிவித்தார். மரண தண்டனையை ஹைகோர்ட் இன்னும் தீர்மானம் செய்ய வேண்டி உள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது சிறுமியின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர். பெரியப்பா என்று அன்போடு அழைத்த தன் மகளை விழுங்கிய பெண்ட்டையாவுக்கு கோர்ட்டு தகுந்த தண்டனை விதித்துள்ளது என்று சிறுமியின் தந்தை கூறினார். பெண்ட்டையாவின் மனைவிகூட மரண தண்டனையை வரவேற்பதாக கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img