குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர். இவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆவார்கள்.
இந்த மருத்துவமனையில் பிற நோயாளிகள் 40 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். தீவிபத்தை அடுத்து இவர்கள் எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மற்ற நோயாளிகளை வெளியேற்றியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்க்ள் உதவினர்.
மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (பி.எம்.என்.ஆர்.எஃப்) இறந்தவரின் உறவினர்களுக்கு தலா ரூ .2 லட்சம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ .50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
Gujarat: Eight people have died in fire which broke out at Shrey Hospital in Ahmedabad today morning pic.twitter.com/MC2RkXpxVj
— ANI (@ANI) August 6, 2020
Fire at Shrey Hospital in Ahmedabad: PM Narendra Modi announces ex-gratia of Rs 2 Lakhs each from Prime Minister's National Relief Fund (PMNRF) to the next of kin of the deceased. Rs 50,000 to be given to those injured due to the fire. #Gujarat https://t.co/KO3WHMkgH8 pic.twitter.com/kATkBezSxx
— ANI (@ANI) August 6, 2020