சுழல்களில் சிக்குண்ட புழு.. கரையேற கரம் தருவது..! ஆச்சார்யாள் அருளமுதம்!

IMG 20200606 201115 843 - 2026

ஒரு புழு நதியில் விழுந்து விட்டது பாய்ந்து வந்த நீரின் ஓட்டம் அதை இழுத்துக்கொண்டு சென்றது. அப்பொழுது வழியில் இருந்த ஒரு நீர்ச்சுழலில் அது சிக்கிக்கொண்டதால் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. உயிரை காப்பாற்றிக்கொள்ள அது எவ்வளவு முயன்றும் அதனால் தப்பிக்க இயலவில்லை. சிறிது நேரத்திற்கு பின் நீரின் ஓட்டம் திசை மாறியதால் அதே சுழலில் இருந்து வெளியே வந்தது‌.

நல்லவேளையாக சுழலில் இருந்து தப்பித்து விட்டோம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்றொரு சூழலில் மாட்டிக்கொண்டது. மறுபடியும் அதே சுழலோடு வேகமாக சுற்றத் தொடங்கியது. இரண்டாவது சுழலிலிருந்து ஒரு வழியாக தப்பித்து கொண்டு வெளியே வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அடுத்த சுழலில் விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக இரக்க மனம் படைத்த ஒருவன் அப்பொழுது அதன் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டு புழு இருக்கும் இடத்திற்கு சென்றான் பக்குவமாக அதை சுழலில் இருந்து வெளியே எடுத்தான். பிறகு கரைக்குச் சென்று நீர் இல்லாத இடமாகப் பார்த்து காய்ந்த நிலத்தில் அதை வைத்தான் தகுந்த சமயத்தில் வந்து அவன் காப்பாற்றாமல் போயிருந்தால் வாழ்க்கை நீரிலேயே முடிந்திருக்கும்.

Screenshot 2020 0806 100447 - 2026

நேரம் செல்ல செல்ல நீரின் மட்டம் அதிகமாக வாய்ப்புண்டு என்று நினைத்தபோது நதியில் இருந்து சற்று தள்ளி இருந்த ஒரு மரத்தில் தங்கிக் கொண்டது.

சுழலில் சிக்குண்டு புழுவைப் போலவே மனிதன் பிறப்பு என்னும் சம்சார சாகரத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான். சுகத்தை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்று மக்கள் முயற்சி செய்கிறார்கள். அப்படி கிடைத்த சுகத்தை அவர்கள் ரசித்து பார்த்ததும் மேலும் அச்சுகத்தை கூட்டிக் கொள்ளவும் இன்பம் அதுதான் என்ற மாயையும் அவர்களை மேலும் மேலும் அழுத்தி ஈர்த்து இழுக்கிறது.

அவர்களை எண்ணற்ற பல காரியங்களில் அச்சுகம் ஈடுபடுத்துகிறது. இவ்வாறு கர்மாவிலும் சுகத்திலும் மனிதர்கள் மாறி மாறி ஈடுபடுவதால் ஒரு சுழற்சி உண்டாகி விடுகிறது. பிறகு அதிலிருந்து வெளியே வர முடியாமல் அவர்கள் தத்தளிக்கிறார்கள்.

இச்சூழல் உலக வாழ்க்கை எனும் நதியில் ஏற்பட்ட ஒரு சுழலைப் போல் இருக்கின்றது எப்படி புழுவானது ஒரு நீர் சுழலிலிருந்து மற்றொன்றில் போய் விழுந்தது அப்படியே மனிதன் இறந்த பிறகு ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவி அடைகிறான். கர்மா சுகம் பிறப்பு இறப்பு இவ்விரு சக்கரங்களிலும் மாட்டிக்கொண்டு தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கும் ஒருவனை காப்பாற்றுவதற்கு மேலே உதாரணத்தில் புழுவை காப்பாற்ற வந்த இரக்க மனம் படைத்தவர்களாக சத்குரு தோன்றி அவனை காப்பாற்றுகிறார்.

IMG 20200717 163323 354 - 2026

குருவின் கருணையும் வழிகாட்டுதலையும் பெற்றுக் கொண்டதும் கரையில் சேர்ந்த புழுவைப்போல அவன் மேற்கொண்ட முயற்சிகளை செய்தால் உயிருள்ள போதே அடையும் மோஷ நிலையை, ஜீவன் முக்த நிலையைப் அவன் அடைவது உறுதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories