கொரோனா: சைக்கிள் ரிக்க்ஷாவில் கொண்டு சென்ற சடலம்! ஆந்திரா அவலம்!

Screenshot_2020_0814_122616

ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், கொரோனாவால் உயிரிழந்தவரை சைக்கிள் ரிக்க்ஷாவில் அழைத்து சென்று தகனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பாபட்லா பகுதியில் 68 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வந்தார். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் பாபட்லா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர், பின்னர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து அவரது உடலை கொண்டு பரிசோதனை மேற்கொண்டதில், முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை உரிய பாதுகாப்புடன் தகனம் செய்வதற்காக, உறவினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால், உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் எந்த வித அறிவிப்பும் தெரிவிக்காமல், கொரோனா பாதிக்கப்பட்ட முதியவரின் சடலத்தை சைக்கிள் ரிக்க்ஷாவில் வைத்து, பாபட்லாவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது உறவினர்களே கொரோனா நோயாளிகளை கொண்டு அடக்கம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதனையடுத்து ஆந்திர அரசு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தொடங்கி வைத்திருந்தாலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் சடலத்தை எடுத்து செல்வதில் அலட்சியம் காட்டி வருவதாக எதிர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், 108 ஆம்புலன்சில் உயிருடன் இருப்பவர்களை மட்டும்தான் கொண்டு செல்ல முடியும், இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல வேண்டுமென்றால், வேறுவிதமான ஆம்புலன்ஸ் வர வேண்டும். அதற்கு சிறிது கால தாமதம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories