December 7, 2025, 10:30 PM
24.6 C
Chennai

தமிழகத்திற்கு குழந்தைகளுடன் வரும் விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலிருந்து விலக்கு! அரசாணை வெளியிட்ட அரசு!

tnbg1 647x450

குழந்தைகளுடன் விமானத்தில் வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தனது உச்சகட்ட பாதிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், மேலும் வைரஸ் தீவிரமடையாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வந்தே பாரத் திட்டம் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச கொரோனா பாதிப்பு நிவாரண பணிகளுக்கு இயங்கும் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகும், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 ம் ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே அவர்களது இல்லத்திற்கு அனுப்பப்பட்டு வந்தனர். இந்நிலையில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் சென்னை வரும் விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து சென்னை வரும் விமான பயணிகள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதில் உடனடி மருத்துவத் தேவை இருப்பவர்கள், உறவினர்களின் மறைவுக்கு வந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், 75 வயதுக்கு மேலானவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த அரசாணையில் திருத்தம் செய்து சென்னை வருவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் சோதனை செய்து நெகட்டிவ் முடிவு வந்திருந்தால் அவர்களுக்கும் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories