ஆடையின்றி வீடியோ கால் பேசிய இளம்பெண்! சபலத்தால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

Published:

Screenshot_2020_0817_223206

மும்பையின் கோரேகானில் (கிழக்கு) கிராஃபிக் டிசைனராக பணிபுரியும் ஒரு 21 வயது வாலிபரிடம் பிரக்யா என்ற 20 வயது பெண் அவரோடு அடிக்கடி சமூக ஊடகத்தில் அரட்டையடித்து வந்துள்ளார் .

இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண் அவரிடம் வீடியோ கால் மூலம் திடீரென நிர்வாணமாக தோன்றினார் .அதை பார்த்து ஆனந்த அதிர்ச்சியடைந்தார் அந்த இளைஞர். உடனே அந்தப்பெண் அவரிடம் நான் வந்தது போல் நீங்களும் நிர்வாணமா இப்படி வீடியோ கால் மூலம் வாங்க, உங்கள அப்படி பார்க்க எனக்கு ஆசையா இருக்கு அப்படின்னு அவரை உசுப்பேத்தினார் .

இதனால் அந்த இளைஞரும் அந்த பெண்ணின் பேச்சை நம்பி, நிர்வாணமாக வீடியோ கால் பேசினார். அப்போது அந்த பெண் அவரின் நிர்வாண தோற்றத்தின் வீடியோவை ரெக்கார்ட் செய்து விட்டார் .

பிறகு சில நாள் கழித்து அந்த பெண் அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார் அதில் உங்களின் நிர்வாண வீடியோ என்னிடம் சிக்கியுள்ளது .இதை உங்களின் நண்பர் மற்றும் உறவினருக்கு அனுப்பாமல்,இருக்க வேண்டுமானால் உடனே 20000 ரூபாய் அனுப்புங்கள் என்றார் .

இதனால் பயந்து போன அந்த இளைஞர் உடனே 20000 ரூபாய் அனுப்பினார் .பிறகு சில நாள் கழித்து அந்த பெண் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு இன்னும் பணம் வேண்டுமென்று கேட்டார் .இதனால் அந்த இளைஞர் அந்த பெண் மீது போலீசில் புகாரளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img