ஆந்திரா, கோயம்பேடு, வாட்ஸ்அப் குரூப் என நீளும் சங்கிலி… கல்லூரி மாணவர்களை கஞ்சா கடத்த உபயோகித்த கும்பல்!

abin

சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை கஞ்சா விற்பனை செய்ய வைத்த கும்பலை போலீஸார் ஸ்கெட்ச் போட்டு பிடித்தனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவர்கள் 18 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த நூதாக்கி ஐசக் மொத்தமாக கஞ்சாவை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் தமிழகத்தில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களை ஹரிபாபு என்பவர் கஞ்சா தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த 9 பேரை நேற்று முன் தினம் விருகம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த கும்பலின் தலைவன் ஐசக்கை விஜயவாடாவில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அவருடன் ஹரிபாபுவும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன. ஊரடங்கு காலத்தில் மது கிடைக்காமல் கஞ்சா போதைக்கு அடிமையான மாணவர்களை மூளை சலவை செய்தோம்.

கஞ்சா விற்பனை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினோம் என்றனர். மேலும் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வர கோயம்பேடு காய்கறி வண்டிகளை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைதான ஹரிபாபுவின் உறவினர்கள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்ததும் தெரியவந்தது.

மேலும் வாட்ஸ் ஆப் குழு அமைத்து கஞ்சா தேவைப்படும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கிராம் கஞ்சா ரூ 100க்கு விற்பனை செய்தனர். 1 கிலோ விற்பனை செய்து கொடுத்தால் ஐசக்கிற்கு ரூ 8000 கமிஷனாக கிடைக்குமாம். இதனால் குடும்ப வறுமையில் உள்ள மாணவர்களிடம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி கஞ்சா விற்பனையில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தி நகர் காவல் துறை துணை ஆணையர் ஹரிகரன் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறுகையில் கஞ்சா விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்துள்ளோம். 9 செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளோம். பைக் பறிமுதல் செய்துள்ளோம்.

கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்த கஞ்சா கும்பலுக்கு வேறு யாருடனாவது தொடர்பிருக்கிறதா என விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories